சென்னை, டிச. 29 - கோவில் நிலங்களில் குடியிருப் போருக்கு குடிமனைப் பட்டா வழங்க வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலி யுறுத்தினார். கொரோனா காலத்தில், கோவில் நிலங்களில் குடியிருப்போர், குத்தகை விவசாயிகளின் குத்தகையை முழு மையாக ரத்து செய்ய வேண்டும், 34ஏ விதிப்படி 2016ஆம் ஆண்டு முதல் உயர்த்தப்பட்ட வாடகையை ரத்து செய்ய வேண்டும், தலைமைச் செயலா ளர் தலைமையில் அமைக்கப்பட்ட உயர்மட்டக்குழுவின் பரிந்துரைகளை விரைந்து வெளியிட வேண்டும், அரசா ணை 318ஐ அமல்படுத்த வேண்டும், ‘மறுஏலம்’ என்ற பெயரில் ஏழை குத்தகை விவசாயிகளை வெளியேற் றக் கூடாது: ஆர்டிஆர் பதிவு செய்து தர வேண்டும், அறநிலைய சட்டப்பிரிவு 34இன்படி தலைமுறை தலைமுறை யாக குடியிருப்போர், குத்தகை விவசா யம் செய்வோருக்கு அந்தந்த நிலங் களை நியாயமான விலையில் கிரயம் செய்து தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழ னன்று (டிச.29) தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு அனைத்துசமய நிலங்களை பயன்படுத்துவோர் பாது காப்பு சங்கம் இந்த போராட்டத்தை நடத்தியது. இதன் ஒருபகுதியாக சென்னை யில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கே.பாலகிருஷ்ணன் கலந்துகொண் டார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: கோவில் நிலங்களில் வசிக்கும் ஏழை எளிய மக்களுக்காக பல கட்ட போராட்டங்களை நடத்திய பிறகும் பட்டா கிடைக்கவில்லை. அதிமுக அரசு பிறப்பித்த அரசாணையின் அடிப் படையில் குடியிருப்போரை ஆக்கிர மிப்பாளர் என வெளியேற்றுவது, வாட கையை 400 விழுக்காடு உயர்த்தி வசூ லிப்பது என தினம் தினம் மக்களை அற நிலையத்துறை அதிகாரிகள் மிரட்டும் போக்கு அதிகரித்து வருகிறது.
கிரயம் செய்து தருக!
தமிழகத்தில் கோவில், மடங்கள், அறநிலையத்துறை நிலங்களில் குடி யிருக்கும் மக்களுக்கு ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கு பட்டா கொடுக்க வேண்டும். வசதி படைத்தவர்களிடம் உரியத் தொகையை பெற்றுக்கொ ண்டு கிரயம் செய்து தர வேண்டும். சாகுபடி செய்யும் குத்தகை விவசாயி களுக்கு பழைய குத்தகை பாக்கி களை தள்ளுபடி செய்ய வேண்டும். தவணை அடிப்படையில் அந்த நிலங்களை கிரயம் செய்து கொள்ள உரிய சட்டத்தை இயற்ற வேண்டும்.
குறைந்த வாடகை நிர்ணயித்திடுக!
விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று பொங்கலுக்கு செங்கரும்பு வழங்க உத்தரவிட்டதை போன்றே தமிழக முதலமைச்சர், 5 லட்சத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களின் பிரச்ச னைக்கு நிரந்தரத் தீர்வு காண நட வடிக்கை எடுக்க வேண்டும். தற்போ துள்ள வாடகைகளை ரத்து செய்து விட்டு, குறைந்த வாடகை நிர்ண யிக்க அமைக்கப்பட்ட குழுவின் முடிவு களை விரைந்து அறிவிக்க வேண்டும். சட்டமன்றத்தில் எழுப்புவோம் அறநிலையத்துறை சட்டத்தை பயன்படுத்தி எளிய மக்களுக்கு பட்டா வழங்க அரசு கொள்கை முடிவெடு க்கும்போது நீதிமன்றம் எப்படி தலை யிட முடியும்? அவ்வாறு தலையிடும் போது நீதிமன்றத்தை எதிர்த்து போராடுவதை தவிர வேறுவழி யில்லை. கோவில் நிலங்களில் வசிப் போரின் பிரச்சனையில் அரசு எந்த வகை யிலும் நிதிச்சிரமம் இல்லை. எனவே இதில் முடிவெடுக்க காலதாமதம் செய்வது தேவையற்றது. இதுகுறித்தெல் லாம் சட்டமன்றத்தில் எழுப்பு வோம்.
அதிகாரிகள் அவசரம் காட்டுவது ஏன்?
நியாயமான வாடகையை நிர்ண யிப்பதற்காக அமைக்கப்பட்ட குழு எந்த முடிவும் எடுக்காத நிலையில், அதி காரிகள் வலுக்கட்டாயமாக வாடகை வசூலிக்க வேண்டும், வீடுகளுக்கு சீல் வைக்க வேண்டும்? அறநிலையத் துறையில் உள்ள அதிகாரிகளின் அர சியல் பின்புலம் வேறுவிதமாக உள்ள தோ? என்ற சந்தேகம் எழுகிறது. இவ்வாறு அவர் கூறினார். இந்தப் போராட்டத்திற்கு சங்கத்தின் மாநிலத் தலைவர் வ.செல்வம் தலை மை தாங்கினார். தமிழ்நாடு விவசாயி கள் சங்கத்தின் மாநிலத்தலைவர் பெ.சண்முகம், காங்கிரஸ் கட்சி யின் துணைத் தலைவர் பொன்.கிருஷ்ணமூர்த்தி, மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் நெ.இல.சீதரன் உள்ளிட்டோர் பேசினர்.