சென்னை, டிச. 22 - கூட்டுறவு அமைப்பில் செயல்படும் எல்பிஎப், சிஐடியு, ஏஐடியுசி, ஐஎன்டி யுசி, எச்எம்எஸ், ஏஐசிசிடியு, ஏஐயுடியுசி ஆகிய மத்திய சங்கங்களின் கூட்டம் சனிக்கிழமையன்று (டிச.21) சென்னயில் நடைபெற்றது. தமிழ்நாடு கூட்டுறவு ஊழி யர் சம்மேளன (சிஐடியு) தலைவர் ஆ.கிருஷ்ண மூர்த்தி தலைமையில் நடை பெற்ற இக்கூட்டத்தில், எல்பிஎப் செயலாளர் இரா. பொன்னுராம், ஏஐடியுசி செயலாளர் ஆதிமூலம் உள்ளிட்டோர் பேசினர். குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து டிச.23 அன்று சென்னையில் நடை பெறும் பேரணியில் தொழிற்சங்கக் கூட்டுக்குழு பங்கேற்பது என்று இந்த க்கூட்டத்தில் முடிவெடுக்க ப்பட்டது. ஜன.8 அன்று மத்திய தொழிற்சங்கங்கள் நடத்தும் அகில இந்திய பொது வேலை நிறுத்தத்தில் கூட்டு றவு சங்க ஊழியர்கள் பங்கேற்பது. மாவட்ட அள வில் கூட்டுக் கூட்டங்களை நடத்தி, வேலை நிறுத்தத்தை விளக்கி துண்டு பிரசுரம், சுவரொட்டிகள் உள்ளிட்ட அனைத்து வகையிலும் பிரச்சாரம் செய்வது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.