tamilnadu

img

பகுதி நேர ரேசன் கடை திறப்பு

திருவள்ளுர், ஜூன் 20- கும்மிடிப்பூண்டி அடுத்த சிறுபுழல்பேட்டை ஊராட்சிக்கு உட்பட்ட முத்துரெட்டிகண்டிகை கிராமத்தில் புதிதாக பகுதி நேர ரேசன் கடை திறப்பு விழா புதனன்று (ஜூன் 19) நடைபெற்றது.

விழாவில் ஊராட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய கவுன்சி லர் எம்.ரவிக்குமார் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்றத்தலைவர் சுசீலா, துணைதத்தலைவர் வெற்றி வேந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதில் சிறப்பு அழைப்பாளராக கும்மிடிப் பூண்டி சட்டமன்ற உறுப்பி னர் டி.ஜெ.கோவிந்தராஜன் பங்கேற்று புதிய பகுதி நேர ரேசன் கடையை திறந்து வைத்து பயனாளிகளுக்கு பொருட்களை வழங்கி னார். நிகழ்வில் ஒன்றியக் குழுத்தலைவர் கே.எம்.எஸ்.சிவகுமார், வட்ட வழங்கல் அதிகாரி பாலாஜி உள்பட பலர் கலந்து கொண்டனர்.