பழனிசாமி வாய் திறந்து ஒரு வார்த்தையாவது கூறுகிறாரா என்றால் இல்லை. இவர்கள் மக்கள் நலனில் அக்கறை இல்லாதவர்கள். இந்த அரசின் செயல்பாடும் அப்படிதான் உள்ளது. \
எனவே டெல்டா மாவட்ட மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண ஒன்றுபட்ட வலுவான போராட்டங்கள் அவசியமாகிறது. இதன் அடிப்படையில் வரும் 11 ஆம் தேதியன்று டெல்டா மாவட்டங்களில் மேட்டூர் அணையை திறக்கக்கோரி விவசாயிகள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டமும், 12 ஆம் தேதியன்று சிபிஎம், விவசாயிகள் சங்கம் மற்றும் பல்வேறு அமைப்புகளின் சார்பில் மனித சங்கிலி போராட்டமும் நடைபெறவுள்ளது. இதில் மக்கள் பெருமளவில் பங்கேற்க வேண்டும். டெல்டா மாவட்ட மக்கள் சொந்த மண்ணில் அகதிகளாகி உணவிற்கு கையேந்தும் நிலை வராமல் தடுத்திட வரும் 18 ஆம் தேதியன்று தஞ்சாவூரில் விவசாயிகள் சங்கத்தின் முன்முயற்சியில் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
இதில் காவிரி பாசன பிரச்சனைகளுக்கு தீர்வு காண நிரந்தர கூட்டமைப்பு ஒன்றை உருவாக்க இருக்கின்றோம். இதன் மூலமாக மக்களுக்கு எதிராக செயல்படும் மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள போராட்டங்களையும் தொடர வேண்டியுள்ளது.கூட்டத்தில் சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன், மாவட்ட செயலாளர் ஜி.சுந்தமூர்த்தி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.பழனிவேல், மாவட்டக்குழு உறுப்பினர் பி.ஆர்.சாமியப்பன், எஸ்.ராமசாமி, டி.முருகையன், நகர செயலாளர் எம்.பாலசுப்ரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.