திரிசூலம் ஊராட்சி யில் திரிசூலநாதர் கோவிலுக்கு சொந்தமான 85 ஏக்கர் நிலத்தில் விவசாயம் நடைபெற்று வந்தது. காலப் போக்கில் அந்த இடங்களை ஆளும் கட்சியும், ஆண்ட கட்சி யும் மனைகளாக மாற்றி விற்று விட்டனர். அந்த இடங்களே ஊராட்சியின் 7 மற்றும் 9வது வார்டுகளாக உள்ளன. “அம்மன் நகர், சாமிநகர், சிவசக்தி நகர், ஜெ.ஜெ.நகர் என உருவாகியுள்ள இந்த பகுதிகளில் 3 ஆயிரம் வீடுகள் உள்ளன. 20க்கும் மேற்பட்ட கிரசர்களும் உள்ளன. குடியிருப்போர் ஒவ்வொருவரும் 5 முதல் 10 லட்சம் ரூபாய் பணம் கொடுத்து இடம் வாங்கி உள்ளனர். இதையெல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டு அமைதியாக இருந்த அறநிலையத்துறை தற்போது, குடியிருப்போரை ஆக்கிரமிப்பாளர்களாக வகைப்படுத்துகிறது. சிவசக்தி நகரில் ஒருசில வீடுகளையும் இடிக்க உத்தரவிட்டனர். மக்களின் கடும் எதிர்ப்பால் உத்தரவை நிறுத்தி வைத்துள்ளனர். இதை வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டு இடங்களை விற்றவர்களே மக்களிடம் பட்டா வாங்கி தருவதாக பணம் வசூலித்துக் கொண்டுள்ளனர். அறநிலையத்துறை வாடகை தாரராக மாற்ற நிர்பந்திக்கிறது. இதனை கைவிட்டு, குடியிருப் போருக்கு அடிமனையை சொந்த மாக்க வேண்டும்” என்று அங்குள்ள மக்கள் கோருகின்றனர்.