சென்னை,ஏப்.29- சென்னையில் கோடை வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து மக்களை வாட்டி வருகிறது. இதனை எதிர் கொள்ளும் வகையில் பீமனாம்பேட்டை நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் வெப்பம் தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக செய்யபட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
கோடை வெப்பத்தை எதிர்கொள்ள சென்னை மாநகராட்சி சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவது டன், பொதுமக்களுக்கு விழிப்புணர் வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மாநகருக்குட்பட்ட பகுதிகளில் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் 188 இடங்களில் தண்ணீர் பந்தல் அமைக்கப் பட்டுள்ளன. 140 நகர்ப்புற ஆரம்ப சுகா தார நிலையங்கள், 140 நகர்ப்புற நல வாழ்வு மையங்கள், 16 நகர்ப்புற சமு தாய நல மையங்கள் மற்றும் 3 மகப்பேறு மருத்துவமனைகளிலும் ஓஆர்எஸ் கரைசல் வழங்கப்படுகிறது.
மேலும் சுகாதாரப் பணியாளர்கள் மூலம் 75 பொது இடங்களில் ஓஆர்எஸ் கரைசல் திங்கட் கிழமை முதல் வழங்கப் படுகிறது. கோடை வெயிலில் செய்யக் கூடியவை மற்றும் செய்யக்கூடாதவை குறித்தும் துண்டு பிரசுரங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தபப்படுகிறது. தேவையின் அடிப்படையில் கடற்கரை உள்ளிட்ட இடங்களில் குடிநீர் வழங்க வும் ஏற்பாடு செய்யப்படும். வெப்பம் தொடர்பான நோய்கள் குறித்து சிகிச்சை வழங்குவதற்கு ஏதுவாக மருத்துவ மனைகள் தயார் நிலையில் வைக்கப்ப ட்டுள்ளன.
வெப்பம் தொடர்பான நோய் களைக் கட்டுப்படுத்த மருந்துகளும், 2.96 லட்சம் ஓ.ஆர்.எஸ். கரைசல் பாக்கெட்டுகளும் கையிருப்பில் உள்ளன. எனவே அதிகரித்து வரும் கோடை வெப்பத்தால் திறந்த இடங்க ளில் பணியாற்றுவோர், நீண்ட தூரம் சாலை பயணங்களை மேற்கொள் வோர் பாதுகாப்பாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.