tamilnadu

img

உயர் கல்வியை தொடராத மாணவர்களின் விபரம் அனுப்ப உத்தரவு

உயர்கல்வி தொடராத மாணவர்களின் விவரத்தை அனுப்ப பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

பள்ளிக்கல்வித் துறை பெறப்பட்ட 79,762 மாணவர்களின் விவரங்களில் 8,588 மாணவர்கள் எவ்வித உயர்கல்விக்கும் விண்ணப்பிக்கவில்லை அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.  இதையடுதது 2021-22-ம் கல்வியாண்டில் +2 வகுப்பு முடித்த மாணவர்கள் இவ்வாண்டு உயர்கல்வி தொடர்ந்துள்ளனரா என்பதை அறிந்திட பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

மாணவர்கள், உயர்கல்வி தொடராததற்கான காரணத்தை கண்டறிந்து வழகாட்டுதல்கள் வழங்கவும் பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. மாணவர்களை தனித்தனியாக தொடர்புகொண்டு உரிய வழிகாட்டுதல்கள் வழங்க வேண்டும் .

மேலும், ஆலோசனைகளை மாநில திட்ட இயக்கத்தில் இருந்து வழங்க திட்டமிட்டுள்ளதாக பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.