சென்னை, டிச.7 - சீமைக் கருவேல மரங்களை அகற்ற உரிய திட்டத்தை வகுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. இது தொடர்பாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட் டோர் வெவ்வேறு வழக்குகளை தொடுத்துள்ளனர்.
இந்த வழக்குகளை வெள்ளிக் கிழமை உயர்நீதிமன்ற சிறப்பு அமர்வு விசாரித்தது. அப்போது அரசு சார்பில் சீமைக் கருவேல மரங்களை அகற்று வது தொடர்பாக அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
அறிக்கையைப் படித்துப் பார்த்த சிறப்பு அமர்வு நீதிபதிகள் இரண்டாண் டுகளுக்கு முன்பு சீமைக் கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பாக தமிழ்நாடு அரசு கொள்கைகளை வகுத்தது என்றும் அதன் பிறகு எந்தவித முன்னேற்றமும் ஏற்பட வில்லை என்றும் குறிப்பிட்டார்.
சுற்றுச்சூழலை பாதுகாப்பது என்பது மாநில அரசின் கடமை என்றும் சீமைக் கருவேல மரங்கள் இல்லாத கிராமங்களே தமிழகத்தில் இல்லை என்ற நிலைதான் இன்னும் நீடிக்கிறது என்றும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
“எனவே இந்த மரங்களை அகற்று வது தொடர்பாக சுற்றுச்சூழல் துறை, நீர்வளத் துறை, ஊரக வளர்ச்சித் துறை ஆகியவற்றின் செயலாளர்கள் அடங்கிய உயர்மட்டக் குழு கூட்டத்தை கூட்டி திட்டம் வகுக்க வேண்டும்,” என்றும் நீதிபதிகள் தெரி வித்தனர்.