tamilnadu

காற்றில் பறந்த உத்தரவு...

சென்னை:
வைரஸ் தொற்று பரவ காரணமாக தமிழக சட்டப்பேரவையின் கூட்டத் தொடர் கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்று வருகிறது.கூட்டத்தில் பங்கேற்கும் பேரவைத் தலைவர், முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர் எதிர்க்கட்சித் தலைவர், சட்டமன்ற உறுப்பினர்கள், பத்திரிகையாளர்கள், அரசு அலுவலர்கள் ஊழியர்கள் உள்ளிட்ட அனைவரும் முகக் கவசம் அணிவது அடையாள அட்டையை அணிவது கட்டாயமாக்கப் பட்டுள்ளது. இதனால் சோதனைகள் பல கட்டங்களிலும் அதிகரிக்கப்பட்டது.முதல் நாள் கூட்டத்தில் அனைவரும் இதை முறையாக கடைப்பிடித்தனர். இரண்டாவது நாள் கூட்டத்தில் அமைச்சர்கள் ராஜேந்திர பாலாஜி, ஜெயக்குமார், எம்.ஆர்.விஜயபாஸ்கர் அன்பழகன், காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற குழு தலைவர் ராமசாமி, அக்கட்சியின் எம்எல்ஏ ராஜேஷ்குமார், திமுக எம்எல்ஏக்கள் மனோ தங்கராஜ், மாசிலாமணி,  செந்தில் பாலாஜி என பலரும்அடையாள அட்டை இல்லாமல்இரண்டாவது நாள் கூட்டத்தில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

;