tamilnadu

img

கல்குவாரி அரவை ஆலைக்கு எதிர்ப்பு

உத்திரமேரூர்,ஜூலை 7- காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே உள்ள அருங்குன்றம் பகுதியை யொட்டி பழவேரி ஏரி உள்ளது. இந்த ஏரியின் நீர்ப் பிடிப்பு பகுதியில் கருங்கல் அரைக்கும் ஆலை அமைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக அரசு புறம் போக்கு நிலங்க ளில் சாலை அமைக்கப்படு கிறது.  அப்பகுதியில் ஆலை அமைந்தால் கருங்கல் அரைக்கும் போது வெளிப்படும் தூசு காற்றில் பரவி அருகிலுள்ள வீடுகளி லும், விவசாய நிலங்களிலும் படியும் . இதனால் விவசாய நிலங்களும், குடியிருப்பும், கால்நடைகளும் பாதிக்கப்படும் என்பதால் ஆலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து உத்திரமேரூர் வட்டாட்சியர் அலுவல கத்தில் புகார் மனு அளித்துள்ளனர். அந்த மனுவில், இந்தப் பகுதியில் கல் அரைக்கும் ஆலை அமைந்தால் விவ சாயம் பாதிக்கப்படும். ஆடு, மாடு போன்ற கால்நடை களை வளர்ப்பதிலும் இடையூறு ஏற்படும். இந்த ஆலையை அனுமதிக்கக் கூடாது.இந்த ஆலைக்காக அரசு புறம்போக்கு இடத்தில் உள்ள மரங்களை வெட்டி சாலை அமைக்கப்படுகிறது. இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் கூறியுள்ளனர்.  இதுகுறித்து  தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் கே.நேரு கூறுகையில், இப்பகுதி முழுவதும் கனிம வளங்கள் நிறைந்த பகுதியாக இருந்தது. தனியார் பெரு முதலாளிகள் லாபம் சம்பாதிப்பதற்காக கிராமத்து மக்கள் விவசாயத்தை இழந்தது மட்டுமின்றி சுவாசக் கோளாறு உட்பட பல்வேறு நோய்களால் அவதிப்படுகின்றனர். மக்கள் விரும்பாத எதையும் அரசு நடைமுறைப்படுத்தக் கூடாது. அவ்வகையில் இப்பகுதியில் கருங்கல் அரவை ஆலைக்கு கொடுத்துள்ள அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்றார்.