tamilnadu

img

சமையல் எரிவாயு விலை உயர்வுக்கு எதிர்ப்பு

சமையல் எரிவாயு விலை உயர்வுக்கு எதிர்ப்பு

சமையல் கேஸ் விலை உயர்வை ரத்து செய்ய கோரியும், பெட்ரோலிய பொருட்களின் விலைகளை குறைக்க வலியுறுத்தியும் வெள்ளியன்று (ஏப்.11) எம்ஜிஆர் நகரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விருகம்பாக்கம் பகுதிக்குழு உறுப்பினர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மத்தியக்குழு உறுப்பினர் என்.குணசேகரன், தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், செயற்குழு உறுப்பினர் ச.லெனின், பகுதிச் செயலாளர் ஏ.நடராஜன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் எம்.ரெங்கசாமி, சி.செங்கல்வராயன், அசோகன், எஸ். ஆனந்தகுமார், பகுதிக்குழு உறுப்பினர்கள் டி.விஜயகுமாரி, கந்தன் உள்ளிட்டோர் பேசினர்.

எம்எம்டிஏ காலனியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அண்ணா நகர் பகுதிச் செயலாளர் கே.மகேந்திரவர்மன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா, மாவட்டக் குழு உறுப்பினர்கள் ப.சுந்தரம், கே.மணிகண்டன், பகுதிக்குழு உறுப்பினர்கள் த.சுகுமார், ம.உதயகுமார், எம்.ஆனந்தன், ஏ.பி.செல்வம், 105ஆவது வட்டம் எம்.எம்.டி.ஏ. காலனி கிளைச் செயலாளர் எஸ்.சுந்தர்ராஜ் ஆகியோர் பேசினர்.

சூளையில் மாவட்டக்குழு உறுப்பினர் பி.கே.மூர்த்தி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய சென்னை மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கே.முருகன், பகுதிச் செயலாளர் வே.ஆறுமுகம், பகுதிக்குழு உறுப்பினர் க.புகழேந்தி, கிளைச் செயலாளர் எஸ்.சிவக்குமார், ம.மாரியம்மாள் உள்ளிட்டோர் பேசினர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பட்டாபிராமில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டக்குழு உறுப்பினர் மா.பூபாலன், நிர்வாகிகள் நடராஜன், அபிமன்யூ, கர்சன், கெங்காதுரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மணலி எம்.எம்.டி.ஏ. மாத்தூரில் ஆர்.ராஜாவர்மன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ்.ராணி, பகுதிச் செயலாளர் டி.பாபு, நிர்வாகிகள் முருகன், ஏ.சங்கர், ஏ.அண்ணாதுரை, ஜெ.ரவிச்சந்திரன், எஸ்.நீலவேணி, எ.துரைராஜ் , ஜவஹர்லால் நேரு, சேதுராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் கலவை தாலுகாவில்  வியாழனன்று (ஏப். 10) செயலாளர் எஸ்.கிட்டு தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டச் செயலாளர் பி.ரகுபதி, வேட்டைகாரன் பழங்குடி மக்கள் முன்னேற்ற சங்க மாநிலத் தலைவர் எம்.சேட்டு, சிபிஐ ராணிப்பேட்டை மாவட்ட அமைப்பாளர் ஆர்.ராஜேந்திரன், சிபிஎம் மாவட்டக் குழு உறுப்பினர் எஸ்.சரோஜா, நிர்வாகிகள் பி.தேவி, அ.ரமேஷ், மு.வெங்கடேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே பகுதி செயலாளர் வி.பெர்னா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டத் தலைவர் இ.மோகனா, மாவட்டச் செயலாளர் ஏ.பத்மா, பொருளாளர் பா.சசிகலா, துணைத் தலைவர் என்.கீதா, பகுதி தலைவர் விஜயா, நிர்வாகிகள் பூங்கோதை, உதய நிலா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

சிபிஎம் செய்யூர் வட்டக் குழு சார்பில் சித்தாமூர் பகுதியில் முகுந்தன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டக் குழு உறுப்பினர்கள் எஸ்.ரவி, எம்.வல்லிக்கண்ணு, வட்ட செயலாளர் க.புருஷோத்தமன் ஆகியோர் பேசினர்.