tamilnadu

img

சமையல் எரிவாயு விலை உயர்வுக்கு எதிர்ப்பு

சமையல் எரிவாயு விலை உயர்வுக்கு எதிர்ப்பு

சமையல் எரிவாயு விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும், பெட்ரோலியப் பொருட்களின் விலைகளை குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சனிக்கிழமையன்று (ஏப்.12) மடிப்பாக்கத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆலந்தூர் பகுதிக்குழு சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பகுதிச் செயலாளர் கே.வி.சிவக்குமார் தலைமை தாங்கினார். தென்சென்னை மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் ஜி.செந்தில்குமார், ம.சித்ரகலா, மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.அரிகிருஷ்ணன், பகுதிக்குழு உறுப்பினர்கள் மோகன்ஜீ, வெங்கடேசன், ஹேமாவதி, முரளி, கிளைச் செயலாளர்கள் ஜான்சி, மோகன், கோகுலகிருஷ்ணன், தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு மாவட்டத் தலைவர் சுரேஷ் ஆகியோர் பேசினர்.  

சமையல் எரிவாயு விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும், பெட்ரோலியப் பொருட்களின் விலைகளை குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சனிக்கிழமையன்று (ஏப்.12) நல்லாங்குப்பத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தி.நகர் பகுதிக்குழு உறுப்பினர் தென்னரசு தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், தி.நகர் பகுதிச் செயலாளர் எம்.குமார், பகுதிக்குழு உறுப்பினர்கள் காமேஷ், முரளி விக்னேஷ் உள்ளிட்டோர் பேசினர்.

சமையல் எரிவாயு விலை உயர்வை திரும்பப் பெறக் கோரி சனிக்கிழமையன்று (ஏப்.12) மந்தைவெளியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மயிலாப்பூர் பகுதிச் செயலாளர் ஐ.ஆர்.ரவி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநிலச் செயற்குழு உறுப்பினர் கே.சாமுவேல்ராஜ், தென்சென்னை மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ்.குமார், மாவட்டக்குழு உறுப்பினர் எம்.சரஸ்வதி எம்.சி., பகுதிக்குழு உறுப்பினர்கள் விஜயா, அன்புரோஸ், மகேஷ் மற்று ஆட்டோ சங்க தலைவர் அரி நாராயணன் உள்ளிட்டோர் பேசினர்.

சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து ஞாயிறன்று (ஏப். 13) வில்லிவாக்கம் நாதமுனி திரையரங்கம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வில்லிவாக்கம் பகுதிச் செயலாளர் எம்.ஆர்.மதியழகன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்தியசென்னை மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கே.முருகன், மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.மனோன்மணி, பகுதிக்குழு உறுப்பினர்கள் ஜி.அன்பழகன், சி.மார்ட்டின்  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

திருவள்ளூர் மாவட்டம்,  ஊத்துக்கோட்டை வட்டம், தாமரைப்பாக்கம் கூட்டுச் சாலையில்  ஒன்றிய அரசின் சமையல் கேஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து கிளைச் செயலாளர்  தேவேந்திரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள்  டி.பன்னீர்செல்வம், ஜி.சம்பத்,  ஏ.ஜி.கண்ணன், முத்த தோழர் கே.செல்வராஜ், வட்ட செயலாளர்      என். கங்காதரன், மாவட்டக்குழு உறுப்பினர் பி.பத்மா, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பி.ரவி, வட்டக்குழு உறுப்பினர்கள் புஷ்பலதா, அருள், சந்துரு திருப்பதி, சிவனேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.