சி.கொத்தங்குடி ஊராட்சியை நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு
சிதம்பரம் அருகே சி.கொத்தங்குடி ஊராட்சியில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சியில் குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அனைத்தும் எந்த பிரச்சனையும் இல்லாமல் பொதுமக்களுக்கு கிடைத்து வந்த நிலையில் தமிழக அரசு இந்த ஊராட்சியை நகராட்சியுடன் இணைப்பதற்கான அரசாணை வெளியிட்டுள்ளது. இதற்கு ஊராட்சியில் வசிக்கும் பொதுமக்கள் ஊராட்சியை நகராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிதம்பரம் சார் ஆட்சியர் உள்ளிட்ட சம்பந்தப் பட்ட அலுவலர்களுக்கு மனு அளித்தனர். இந்த நிலையில் புதன்கிழமை சிதம்பரம் காந்தி சிலை அருகில் சி.கொத்தங்குடி ஊராட்சியை நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு முன்னாள் ஊராட்சி மன்றத் தலை வர் வேணுகோபால் தலைமை தாங்கினார். பி.முட்லூர் ஊராட்சி மன்றத் தலைவர் ஜெயசீலன் வரவேற்றார். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினர் எஸ்.ஜி ரமேஷ் பாபு, மாதர் சங்க மாவட்ட தலைவர் மல்லிகா, நகரத் தலைவர் அமுதா, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் அம்சா வேணு கோபால், பாபுராஜன், தணிகை வேல், வேதநாயகி, செல்லப்பன், தியாகராஜன், அந்தோணிசாமி, திரு மூர்த்தி மற்றும் இளையபெருமாள் மனித உரிமை பேரவை நிறுவனர் கோகலே, தன்னாட்சி அமைப்பின் தலைவர் ஜாகிர் உசேன், பொதுச் செயலாளர் சரவணன், துணைத் தலைவர் நந்தகுமார் சிவா, அறப்போர் இயக்கம் மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு ஊராட்சியை நகராட்சியுடன் இணைத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பேசினர். இதில் அனைத்து கட்சிகளை சார்ந்த நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் மகளிர் சுய உதவிக் குழுவினர், இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு ஊராட்சியை நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து முழக்கங்களை எழுப்பினர். இதனை தொடர்ந்து போராட்டத்தில் கலந்து கொண்ட வர்கள் சிதம்பரம் சாராட்சியர் எஸ்.கிஷன்குமாரை அவரது அலுவலகத்தில் சந்தித்து மனு அளித்தனர். இதுகுறித்து சரியான நடவடிக்கை இல்லை யென்றால் வரும் 19 ஆம் தேதி சிதம்பரம் சாராட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளனர்.