சென்னை, ஜூலை 6- தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி சென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற 34-வது உள்விழி உள்வைப்பு மற்றும் ஒளிவிலகல் அறுவை சிகிச்சை மாநாட்டினை துவக்கி வைத்து நாரி சக்ரி புரஷ்கார் விருது பெற்ற பிரபல கண்மருத்துவர் சுஜாதா மோகனுக்கு விருதினை வழங்கி கவுரவித்தார். இந்தியாவில் கண் அறுவை சிகிச்சை நிபுணர்களின் 34-வது உள்விழி உள்வைப்பு மற்றும் ஒளிவிலகல் அறுவைசிகிச்சை (ஐஐஆர்எஸ்ஐ 2019) மாநாட்டை– தொடங்கி வைத்து பேசிய முதலமைச்சர், நோயாளி களுக்கு சிகிச்சையளிப்பதில் மேம்பட்ட திறனை கொண்டிருக்க வேண்டு மென்பதற்காக உலகெங்கிலுமிருந்து வந்திருக்கும் நிபுணர்களிடமிருந்து சமீபத்திய தொழில்நுட்பம் மற்றும் உத்திகளை கண் அறுவைசிகிச்சை மருத்துவர்கள் கற்றுக்கொள்வதற்கு இதுபோன்ற மாநாடு உதவும் என்றார். சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜய பாஸ்கர், கவுரவ விருந்தினராக கலந்து கொண்டார். மாநாட்டின் அறிவியல் குழு தலைவர் டாக்டர் மஹிபால் சச்தேவ், பொது செயலாளர் பேராசிரியர் அமர் அகர்வால், ஐ.ஐ.ஆர்.எஸ்.ஐ டாக்டர் அமித் தரஃப்தர் , முன்னாள் தலைவர் டாக்டர் மோகன் ராஜன் ஆகிய பிரபல மருத்துவர்கள் தொடக்கவிழா நிகழ்வில் பங்கேற்றனர். உலகெங்கிலுமிருந்து வருகை தந்திருக்கும் 20 பிரபல நிபுணர்களோடு 2000க்கும் அதிகமான கண் மருத்து வர்கள் இரண்டு நாட்கள் நடைபெறும் இந்நிகழ்வில் கலந்து கொள்கின்றனர்.