சென்னை:
தாம்பரத்தில் வகைப்படுத்துதல் மையத்தைத் திறந்து வைத்த அமைச்சர் விஜயபாஸ்கர், பொதுமக்கள் அச்சமின்றி இருக்கலாம். அரசு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது என்று தெரிவித்தார்.இதுகுறித்து தாம்பரத்தில் செய்தியாளர்களிடம் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது:
தாம்பரத்தில் தற்போது திறக்கப்பட்ட இந்த மையத் தில் 500 படுக்கை வசதிகள் உள்ளன. அதில் 300 படுக்கைகளில் ஆக்சிஜன் வசதி உள் ளது. ஏனென்றால் ஆக்சிஜன் வசதி மிக முக்கியம். உலக சுகாதார நிறுவனம் உள்ளிட்ட பலரும் நம்மைப் பாராட்டுகிறார்கள்.ஆரம்பக்காலத்தில் கண்டறிந்து சிகிச்சை வழங்கி வருவதை அனைவரும் பாராட்டுகின்றனர். அதில் மரண விகிதத்தைக் குறைப் பது நமது முக்கியமான நோக்கம். அதில் நாம் இந்தியாவிலேயே குறைந்த அளவில் இருக்கிறோம். அதற் கான அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறோம்.
அடுத்து ஓரிரு நாளில் சென்னை கிண்டி கிங் இன்ஸ்டிடியூட்டில் நவீன உபகரணங்கள், 700 படுக்கைகளுடன் கூடிய பிரம்மாண்ட மருத்துவமனை தயாராகி வருகிறது. பல கட்டமைப்புகளைத் தொடர்ந்து உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். வலுப்படுத்தி வருகிறோம்.இவ்வாறு அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.