நவம்பர் 16 ஆம் தேதி கல்லூரிகள் திறக்கப்பட்டால் மாணவர்களை விடுதி அறையில் தலா ஒரு மாணவர் மட்டுமே தங்க வேண்டும் என பல்கலைக்கழக மானியக்குழு அறிவுறுத்தியுள்ளது.
கல்லூரிகள் திறப்பது குறித்து பல்கலை கழகங்களுக்கும், கல்லூரி நிர்வாகங்களுக்கு சில அறிவுரைகளை பல்கலைக்கழக மானியக்குழு கூறியுள்ளது.
கல்லூரிகள் திறக்கப்பட்டால் விடுதிகளில் ஒரு அறையில் ஒரு மாணவர் மட்டுமே தங்க வைக்க வேண்டும். திறக்கப்பட்டு பின் வரும் தேதிகளில் மாணவர்கள் வந்தால் அவர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும். மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதால் தங்கும் விடுதிகளில் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.
ஆனால், நடைமுறையில் இவைகள் சாத்தியமில்லை என்பதால் உயர்கல்வித்துறை குழப்பத்தில் உள்ளதாகவும் தெரியவந்துள்ளது. கல்லூரிகள் மற்றும் பள்ளிகள் திறப்பது குறித்து பெற்றோர்களிடம் கருத்து கேட்புகூட்டங்கள் நடந்து வருகிறது. பெற்றோர்களின் கருத்துகளுக்கு ஏற்ப பள்ளிகள் திறக்கப்படுமா ? என மாணவர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.