யுஜிசி பரிந்துரைப்படி தமிழகத்திலும் கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு இணையவழித் தேர்வு நடைபெற உள்ளது. இதனை ரத்து செய்யக்கோரி சென்னை டிபிஐ வளாகத்தில் உள்ள உயர்கல்வித்துறை இணை இயக்குநர் ஜோதி வெங்கடேசனிடம், இந்திய மாணவர் சங்கத்தின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் தீ.சந்துரு, மத்திய சென்னை மாவட்டத் தலைவர் மிருதுளா, செயலாளர் விக்னேஷ் உள்ளிட்டோர் மனு அளித்தனர்.