tamilnadu

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

திருவள்ளுவரின் வரலாறு தெரியாமல் பேசக் கூடாது:
அமைச்சர் ரகுபதி

சென்னை,ஜன.17- ராமேஸ்வரம் சென்ற ஆளுநர் ஆர்.என்.ரவி, திருவள்ளுவர் தினத்தை யொட்டி, சுற்றுலா மாளிகையில் திரு வள்ளுவர் உருவப்படத்துக்கு மரி யாதை செலுத்தினார். அப்படத்தில் திரு வள்ளுவர் காவி உடை அணிந்திருந் தார்.

இந்தச்சூழலில், ஆளுநர் ஆர்.என்.ரவியின் ட்விட்டர் பதிவில் சனாதனம் குறித்த கருத்துக்கு பதிலளித்து சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி வெளியிட்ட பதி வில் கூறியிருப்பதாவது:-

தனக்குத் தெரியாத பலவற்றைக் குறித்து, தனக்கு எல்லாம் தெரிந்தது போல் பேசி சர்ச்சையில் சிக்கிக் கொள்வது ஆளுநரின் வாடிக்கை. ‘வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு’ என்ற பாரதியின் பாடல் வரிகளில் உள்ள தமிழ்நாடு பெயர் சர்ச்சையில் கடந்த ஆண்டு சிக்கித் தவித்து, பின்னர் தமிழர் களுடைய எதிர்ப்புகளுக்குத் தலை பணிந்து, ‘இது தமிழ்நாடு தான்’ என்று  ஒப்புக்கொண்டார் ஆளுநர் ஆர்.என்.ரவி. பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டுவந்த பணிகளைச் செய்யா மல், கையில் கிடைக்கும் அனைத்துக் கும் காவிச் சாயம் பூசிக் கொண்டு இருக்கும் ஆளுநர், பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற வள்ளுவரின் பக்கம் மீண்டும் திரும்பியிருக்கிறார். அவர் கூறும் பாரம்பரியம், ஈராயிரம் ஆண்டுகளாகக் கோடிக்கணக்கான மக்களை ஒடுக்கிய பாரம்பரியம் என்பது தமிழக மக்களுக்கு நன்கு தெரியும்.

வேதநெறிக்கு எதிரான குறள்நெறி கூறிய அய்யன் வள்ளுவரின் வர லாறே தெரியாமல், ஆளுநராக வந்ததா லேயே தான் சொல்வதெல்லாம் வேதம் என்பதைப்போல உருட்டிக் கொண்டி ருக்கும் ஆளுநர், உடனே காவிக் கட்சி யில் சேர்ந்துவிட்டு, அரசியல் பேசலாம். அதற்குக் காலதாமதமாகும் என்றால் திருவள்ளுவர் பற்றிய அரிச்சுவடி கூடத் தெரியாமல் பேசுவதை விடுத்து, அரசி யல் சட்டப்படி நடக்க முயற்சி செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்து ள்ளார்.

 இன்று மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்
சென்னை, ஜன.17- சென்னை வானிலை ஆய்வு மையம்  வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி யிருப்பதாவது:-

மாலத்தீவு பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், வியாழக்கிழமை (ஜன.18) தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். வட மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக் கால் பகுதிகளில் வறண்ட வானிலை நில வக்கூடும். தமிழ்நாட்டில் ஓரிரு இடங்க ளில் அதிகாலையில் லேசான பனி மூட்  டத்திற்கு வாய்ப்புள்ளது.

ஜன.19 அன்று தென் மாவட்டங்க ளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். வட மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதி களில் வறண்ட வானிலை நிலவக் கூடும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட் டுள்ளது.

தங்கம் விலை குறைந்தது
சென்னை,ஜன.17- சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ. 46,480-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிராம் தங்கம் ரூ.40 குறைந்து ரூ.5,810-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு 60 பைசா குறைந்து ரூ.77.40 ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோவிற்கு ரூ.600  குறைந்து ரூ.77,400 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

‘‘இலவு காத்த கிளியை போல் அண்ணாமலை”: ஜெயக்குமார்

சென்னை,ஜன.17- முன்னாள் அமைச்சர் டி.ஜெயக் குமார் சென்னையில் செய்தியாளர் களை சந்தித்தார்.

அப்போது, “என்னை பொறுத்தவரை ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பது தான். இறைவன் எங்கும் இருக்கி றான். அண்ணாமலை முதலமைச் சராக வேண்டும் என்று ரஜினிகாந்த் விருப்பம் தெரிவித்ததாக கூறப்படுவது ஒரு அறையில் பேசிய விஷயம். ரஜினிகாந்த் சபையில் தெரி விக்கட்டும் நான் பதில் சொல்கி றேன்.

அண்ணாமலை தமிழ்நாட் டிற்கு முதலமைச்சராவது என்பது இலவு காத்த கிளி போல தான்” என்றார்.

ஸ்டார்ட் அப் தரவரிசையில் தமிழ்நாடு முதலிடம்
சென்னை,ஜன.17- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  எக்ஸ்தளத்தில் வெளியிட்டுள்ள பதி வில் தெரிவித்திருப்பதாவது:- ஸ்டார்ட் அப் தரவரிசைப் பட்டிய லில், கடந்தஆட்சிக் காலத்தில் 2018- இல் கடைசித் தரநிலையில் இருந்த தமிழ்நாடு, நமது திமுக ஆட்சியில் 2022 ஆம் ஆண்டுக்கான தரவரிசை யில் முதலிடத்தை அடைந்துள்ளது.

புத்தொழில் ஆதார நிதி, பட்டியலி னத்தவர் மற்றும் பழங்குடியினர் தொழில் நிதியம் நிகழ்வுகள் என  ஒட்டுமொத்தமாக நமது அரசு முன்னெடுத்த மறுசீரமைப்பு முயற்சி களாலேயே தமிழ்நாடு தற்போது சிகரத்தில் அமர்ந்துள்ளது.

தமிழ்நாட்டில் தற்போது 7,600 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உள்ளன. அவற்றுள் 2022 ஆம் ஆண்டில் மட்டும் 2,250 நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பதே நாம் நிகழ்த்திய பாய்ச்சலுக்குச் சான்று. இந்தச் சாதனை மாற்றத்தைச் சாத்தியமாக்க உழைத்த அமைச்சர் தா.மோ.அன்பரசனுக்கும் அதிகாரி களுக்கும் எனது பாராட்டுகள்! இந்த இடத்தைத் தக்கவைக்கவும் மேலும் உயரங்களைத் தொட உழைக்கவும் வேண்டுகிறேன்!

இவ்வாறு அதில் தெரிவித்துள் ளார்.