tamilnadu

img

தண்டையார்பேட்டை IOC நிறுவனத்தில் பாய்லர் வெடித்த விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!

சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் ஆயில் கசிவு ஏற்பட்டு பாய்லர் வெடித்து விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் ஆயில் கசிவு ஏற்பட்டது.இதனால் அப்பகுதியில் தீ சுற்றிலும் எரிந்து வருகின்றது. தீயணைப்பு வீரர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள், ஆம்புலன்ஸ் வாகனங்கள் அங்கு முகாமிட்டுள்ளனர். அங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ள ஊழியர்களை உடனடியாக மருத்துவமனைக்கு கூட்டிச்செல்ல பணிகள் நடைபெற்று வருகின்றது.

பாய்லர் வெடித்து காயமடைந்த 2 ஊழியர்களில் சென்னை கரிமேடு பகுதியைச் சேர்ந்த 52 வயதான  பெருமாள் என்பவர் உயிரிழந்துள்ளார். பாய்லர் வெடித்து பலத்த காயமடைந்த மற்றொரு ஊழியர் சரவணனுக்கு தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

பாய்லர் வெடித்ததை அடுத்து நிறுவனத்திலிருந்து ஊழியர்கள் அனைவரும் அலறி அடித்துக் கொண்டு வெளியேறினார்.

மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.