tamilnadu

img

தமிழ்நாட்டில் மேலும் ஒரு சுங்கச்சாவடி திறப்பு!

தமிழ்நாட்டில் மேலும் ஒரு சுங்கச்சாவடியை திறக்க உள்ளதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது.
தஞ்சை - விக்கிரவாண்டி தேசிய நெடுஞ்சாலையில் சேத்தியாதோப்பு-சோழபுரம் இடையே மானம்பாடி பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடியை, வரும் ஜூன் 12 ஆம் தேதி திறக்கப்பட்டு அன்று முதல் பயன்பாட்டுக்கு வரும் என தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது.
கார், வேன் உள்ளிட்ட இலகுரக வாகனங்கள் ஒருமுறை பயணிக்க ரூ.105 கட்டணமும், இரு முறை பயணிக்க ரூ.160 கட்டணமும் வசூலிக்கப்பட உள்ளது.
வணிகப் பொருள்களை ஏற்றிச் செல்லும் இலகுரக வாகனங்கள், மினி வேன் மற்றும் மினி பேருந்து ஆகியவற்றுக்கு ஒருமுறை பயணிக்க ரூ.170 கட்டணமும், இரு முறை பயணிக்க ரூ.255 கட்டணமும் வசூலிக்கப்பட உள்ளது.
லாரி மற்றும் பேருந்துகளுக்கு ஒருமுறை பயணிக்க ரூ.360 கட்டணமும், இரு முறை பயணிக்க ரூ.540 கட்டணமும் வசூலிக்கப்பட உள்ளது.
அதிகபட்சமாக 7 அல்லது அதற்கு மேற்பட்ட சக்கரங்கள் கொண்ட கனரக வாகனங்களுக்கு ஒருமுறை பயணிக்க ரூ.685 கட்டணமும், இரு முறை பயணிக்க ரூ.1,025 கட்டணமும் வசூலிக்கப்பட உள்ளது.