tamilnadu

img

பூந்தமல்லி-கோடம்பாக்கம் வழித்தடத்தில் அடுத்த ஆண்டு மெட்ரோ ரயில்

சென்னை,பிப்.19- பூந்தமல்லி-கோடம்பாக்கம் வரை யிலான உயர் வழித் தடத்தில் முதற்கட்ட மாக அடுத்த ஆண்டு டிசம்பரில் மெட்ரோ ரயில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்று நிதி யமைச்சர் தங்கம் தென்னரசு  தெரி வித்தார்.

சட்டப்பேரவையில் பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய அமைச்சர் தினந் தோறும் சுமார் மூன்று லட்சம் பயணி கள் விரும்பிப் பயணிக்கும் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகள் ரூ.63,246 கோடியில் 119 கிலோ மீட்டர் தூரத்திற்கு மூன்று வழித் தடங்களில் துரிதமாக நடை பெற்று வருகிறது.

இதில், பூந்தமல்லி-கோடம் பாக்கம் வரையிலான உயர் வழித் தடத்தில் முதற்கட்டமாக அடுத்த ஆண்டு டிசம்பரில் மெட்ரோ ரயில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். மெட்ரோ ரயில் திட்டப் பணிகளுக்காக இந்த பட்ஜெட்டில் ரூ.12 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கிளாம்பாக்கம் வரை மெட்ரோ?
சென்னை விமான நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் பேருந்து முனையம் வரை நீட்டிப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை ரூ.4,625 மதிப்பீட்டில் பெறப்பட்டு ஒன்றிய அரசின் பங்களிப்பிற்காக ஒப்புதல் கோரப்பட்டுள்ளது. மேலும், கோயம்பாடு முதல் ஆவடி வரை யிலும், பூந்தமல்லி முதல் பரந்தூர் வரை யிலான இரண்டாம் கட்டத்தின் நீட்டிப்பு வழித் தங்களுக்கு விரிவான திட்ட அறிக் கைகள் தயாரிக்கப்படும்.

கோவை மாநகரில் அவிநாசி சாலை மற்றும் சத்தியமங்கலம் சாலை வழித் தடங்களில் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு என ரூ.10,740 கோடி மதிப்பீட்டிலும், மதுரை மாநகரில் திருமங்கலம் மற்றும் ஒத்தக்கடை பகுதிகளை இணைத்தி டும் வகையில் ரூ.11,368 கோடி மதிப்பீட்டிலும் தயாரிக்கப்பட்ட விரி வான திட்ட அறிக்கைகளை ஒன்றிய அரசின் மூலதப் பங்களிப்பு பெறுவ தற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் அனுமதி  கிடைத்த வுடன் இந்த இரு நகரங்களில் மெட்ரோ  ரயில் அமைப்பதற்கான பணிகள் தொடங்கும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.