சென்னை, ஜூன் 23- கொரோனா தடுப்பு பணியில் சென்னை மாநகராட்சி சுகாதாரப் பணியாளர்கள்,வருவாய்த் துறையினருடன் மாநகராட்சி பள்ளி ஆசிரியர்க ளும் பயன்படுத்தப்பட்டு வருகின்றனர். அதே சமயம், மாநகராட்சி கல்வித்துறை உத்தரவின் பேரில், கடந்த 2 மாதங்களாக இணையவழியில் தற்போதைய 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாண வர்களுக்கு பாடங்களையும் எடுத்து வரு கின்றனர். தற்போது மண்டல அலுவலகங்களிலிருந்து கலந்துரையாடல் மூலம் கொரோனா தொற்று பாதிக்கபட்டவர்களுக்கு வழிகாட்டுதல்களை செய்கின்றனர். இந்நிலையில், ஜூன் 22 முதல் ஆசிரியர்கள் கொரோனா பாதித்த இடங்க ளுக்கு நேரிடையாகச் சென்று, பாதித்தவர்களிடம் இருந்து தகவல்களை பதிவு செய்ய வேண்டும் என்று காட்டயப்படுத்தப்படுகின்றனர்.
களப் பணியாளர்கள் செய்யும் வேலையை கட்டாயப்ப டுத்தி ஆசிரியர்களை செய்ய வைக்கின்றனர். இத்தகையப் பணிகளை ஆசிரியர்கள் தன்னார்வத்தில் செய்ய வேண்டுமே தவிர கட்டாய படுத்தக்கூடாது என்று மே 2ஆம் தேதியே தமிழக பள்ளிக்கல்வித் துறை முதன்மை செயலர் அனைத்து மாவட்ட ஆட்சித்தலைவர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளர். இதற்குமாறாக, ஆசிரி யர்களின் விருப்பதை கேட்காமல் மாநகராட்சி நிர்வாகம் ஆசிரியர்களை நேரிடையாக களத்தில் பணி செய்ய கட்டாயப்படுத்துகிறது. இந்த பணியை செய்ய மறுக்கும் ஆசிரியர்களை தற்காலிக இடைநீக்கம் செய்யப்படுவார்கள் என்று அச்சுறுத்துகிறது. ஆசிரியர்களை கட்டாயப்படுத்தி செய்யச்சொல்லும் பணியை, மண்டல அலு வலகங்களில் இருந்தும், வீட்டில் இருந்தும் செய்ய முடியும் என்பதை மாநகராட்சி கல்வித்துறையின் கவனத்திற்கு ஆசிரியர் சங்கங்கள் கொண்டு சென்றுள்ளன. இருப்பினும் களப்பணிக்கு செல்ல கட்டாயப்படுத்துகின்றனர். இதனை தவிர்க்க வேண்டும் என்றும் ஆசிரியர்கள் வலியுறுத்தி யுள்ளனர்.