சென்னை,டிச.2- சென்னை ரயில்வே கோட்டத்தில் கடந்த 10 மாதத்தில் ரயிலில் அடிபட்டு 1,170 பேர் இறந்துள்ளனர். இதில், தாம்பரம் மற்றும் மாம்பலம் ரயில்நிலையங்களில் அதிகம் பேர் ரயிலில் அடிபட்டு இறந்தது குறிப்பிடத்த க்கது. சென்னை ரயில்வே காவல்துறை கட்டுப்பாட்டில் சென்ட்ரல் ரயில்நிலையம், எழும்பூர், மாம்பலம், தாம்பரம், கொருக்குப்பேட்டை, ஜோலார்பேட்டை, விழுப்புரம், ஓசூர், சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, ஊட்டி உள்ளிட்ட ரயில் நிலையங்கள் செயல்படுகின்றன. இந்த ரயில் நிலையங்களில் கடந்த ஜனவரி மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை 1,170 பேர் ரயிலில் அடிபட்டு உயிரி ழந்துள்ளனர். மேலும், உயிரிழந்தவர்களில் 90 சதவீதம் பேர் ஆண்கள். அதில் 18 வயது முதல் 25 வயதுடையவர்கள் அதிகம். இவ்வாறு நடைபெறும் ரயில் விபத்துகளில் இறந்தவர்களின் விவரங்களை கண்டுபிடிப்பது சிரமம். ஆனாலும் 1,078 உடல்கள் அடையாளம் காணப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.மேலும் 500க்கும் மேற்பட்ட உடல்கள் அடை யாளம் காணமுடியாமல் காவல்துறையினர் பாதுகாத்து வருவதாகக் கூறுகின்றனர். மேலும் சென்னையை பொறுத்தவரை தாம்பரம் மற்றும் மாம்பலம் ரயில் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் அதிக விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து ரயில்வே காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,பெரும்பாலான இளைஞர்கள் எப்போதும், செல்போனில் மூழ்கி விடுகின்றனர். பல நேரங்களில் செல்போனில் பேசியபடி ரயில் வருவது கூட கவனிக்காமல் தண்டவாளத்தை கடக்கின்ற னர். ஒரு சிலர் ஆபத்து என்று தெரிந்தும் தண்டவாளத்தில் நடந்து செல்கின்றனர். சில கல்லூரி மாணவர்கள் ரயில் படிகட்டில் தொங்கியபடி பயணம் செய்கின்றனர். இதனால், விபத்தில் சிக்கி உயிரிழக்கின்றனர் என்றார். கடந்த ஜனவரி மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை கடந்த 10 மாதங்க ளில் தாம்பரம் ரயில் நிலையத்தில் 152 விபத்துகளில் 150 பேரும், சேலம் ரயில் நிலையத்தில் 126 விபத்துகளில் 119 பேரும், ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் 106 விபத்துகளில் 105 பேரும், கொருக்குப்பேட்டை ரயில் நிலையத்தில் 113 விபத்துகளில் 113 பேரும், மாம்பலம் ரயில் நிலையத்தில் 90 விபத்துகளில் 89 பேரும் உயிரிழந்துள்ளனர்.