tamilnadu

img

தமிழகத்தில் ஒமிக்ரான் பிஏ4 புதிய வகை தொற்று கண்டுபிடிப்பு!  

தமிழகத்தில் ஒமிக்ரான் பிஏ4 புதிய வகை கொரோனா தொற்று வகை கண்டறியப்பட்டுள்ளது என மருத்துவத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.    

இதுதொடர்பாக செய்தியாளர் சந்திப்பில் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில், செங்கல்பட்டு மாவட்டம் நாவலூரில் ஒருவருக்கு புதிய வகை கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தற்போது அவர் குணமடைந்துவிட்டார். மேலும் அவருடன் தொடர்பிலிருந்த யாருக்கும் தொற்று பரவவில்லை. 

இருப்பினும், சம்பந்தப்பட்ட நபரின் குடும்பத்தினரையும் பரிசோதனை செய்யப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். மற்ற மாநிலங்களில் ஒமிக்ரான் பிஏ4 வகை கொரோனா பரவி உள்ளதா என்பதை ஒன்றிய அரசு தெளிவுபடுத்தும் என்றும் தெரிவித்தார்.  

முன்னதாக இந்தியாவில் கடந்த வியாழக்கிழமை பிஏ4 வகை கொரோனா தொற்றின் முதல் பாதிப்பு ஹைதராபாத்தில் கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.

;