கோடை வெயிலின் தாக்கத்தினை முன்னிட்டு, போக்குவரத்து சிக்னல் பகுதிகளில் வாகன ஒட்டிகளின் நலனுக்காக முதற்கட்டமாக 8 போக்குவரத்து சிக்னல் பகுதிகளில் நிழல் பந்தல்கள் அமைக்கப்பட்டு வருவதையொட்டி, ஆணையர் ெஜ.ராதாகிருஷ்ணன் ரிப்பன் கட்ட சந்திப்பு, ராஜா முத்தையா சாலை சிக்னலில் அமைக்கப்பட்டுள்ள நிழல் பந்தலை வியாழனன்று (மே 9) பார்வையிட்டு வாகன ஓட்டிகளுடன் கலந்துரையாடினார். உடன் தலைமைப் பொறியாளர் எஸ்.ராஜேந்திரன் உள்ளார்.
பழமை வாய்ந்த பிராட்வே பேருந்து நிலையம் மற்றும் குறளகம் கட்டிடத்தை இடித்து, ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையம் , பன்னடுக்கு வணிக வளாகத்தை தமிழக அரசு உருவாக்க உள்ளது. எனவே பேருந்து நிலையத்தை தற்காலிகமாக தீவுத்திடலுக்கு மாற்ற உள்ளது. எனவே பேருந்து நிலையத்தில் வியாபாரம் செய்து வரும் வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திடக் கோரி பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ. ராதாகிருஷ்ணனை வியாழனன்று (மே 9) ரிப்பன் மாளிகையில் சென்னை மாநகர் சிறு கடை வியாபாரிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் எம். அபுதாஹிர், மார்க்சிஸ்ட் கட்சியின் 98வது வட்ட மாமன்ற உறுப்பினர் ஆ.பிரியதர்ஷினி மற்றும் சங்க நிர்வாகிகள் கே.எஸ்.சித்திக் , ஏ. அன்வர் சாதிக் , அப்பாஸ் ஆகியோர் பேசினர்.
சென்னை, கிண்டி, காந்தி மண்டப வளாகத்தில் பராமரிப்பு பணிகள்
ஆத்துப்பாக்கம் கிராமத்தில் 2 கோவில்களில் திருட்டு
திருவள்ளூர்,மே 9- திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், ஆத்துப்பாக்கம் கிராமத்தில் ஏரிக்கரை ஓரத்தில் செல்லி அம்மன் திருக்கோவில் மற்றும் செவிட்டு செல்லி அம்மன் திருக்கோவில்கள் என இரண்டு திருக்கோவி ல்கள் உள்ளன.
இந்நிலையில், இந்த இரண்டு கோவில்களில் பாஸ்கர், கோவிந்தன் ஆகியோர் புதனன்று இரவு பூஜையை முடித்துக் கொண்டு கோவில்களை பூட்டிக்கொண்டு வீட்டிற்கு சென்றனர். வியாழன்று விடி யற்காலை அவ்வழியே சென்ற பொதுமக்கள் கோவில்களின் பூட்டுக்கள் உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து பெரிய பாளையம் காவல் நிலைய போலீசாருக்கு பொது மக்கள் தகவல் அளித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் வந்து கொள்ளை சம்பவம் நடை பெற்ற பகுதியில் விசாரணை மேற்கொண்டனர்.