நெமிலிச்சேரி ஏரி சுமார் 44 ஏக்கர் பரப்பளவு கொண்டது. ஏரியின் பெரும்பகுதியை பகுதி மேடாக்கி மக்கள் மாடி வீடுகள் கட்டி வாழ்ந்து வருகின்ற னர். ஏரியை சுற்றி பெரியார் நகர், பேரியம்மன் நகர், நேதாஜி நகர் பகுதிகளில் ஆயிரத்திற் கும் அதிகமான வீடுகள் உள்ளன. இதில் 500 வீடுகளை அகற்ற தென்னிந்திய பசுமை தீர்ப்பா யம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் நீர்வள ஆதாரத்துறை, பேரியம்மன் நகர் ஆலமரத் தெருவில் உள்ள 120 குடும்பங்கள் 21 நாட்களில் வெளியேற நோட்டீஸ் கொடுத்துள்ளது. ஏரியின் கரையில் உள்ள ஆலமரத் தெருவில் 50 வருடமாக வசித்து வரும் ஆர்.சண்முகம் கூறுகையில், “செங்கல்பட்டிலிருந்து பிழைப்பு காக இங்கு வந்தேன். காடாக இருந்த இடத்தை சீரமைத்து குடியிருக்கும் இடமாக மாற்றி இருக்கி றோம். 2 வருடத்திற்கு முன்புதான் தெரு விளக்கை பொருத்தினார்கள். மழை வெள்ளம் வந்தபோதெல்லாம் எந்த அதிகாரியும் எட்டி கூட பார்த்ததில்லை. இப்போது திடீரென்று வந்து நோட்டீஸ் கொடுக்கிறார்கள்” என்று ஆதங்கப்பட்டார். “ஏரியை சுற்றி 4 ஆயிரம் வீடுகள் உள்ளன. இதில் 528 வீடுகளுக்கு மட்டும் நோட்டீஸ் கொடுக்க உள்ளனர். பெரியார் நகர், நேதாஜி நகரில் மக்கள் நோட்டீசை வாங்க மறுத்துவிட்டனர். ஆலமரத் தெருவில் மட்டும் வாங்கி விட்டோம். இந்த தெருவில் சிமெண்ட் சாலை, குடிநீர் குழாய் உள்ளது. பாதாள சாக்கடை மட்டும்தான் இல்லை. நோட்டீஸ் கொடுத்த அதிகாரிகளிடம் மக்கள் கேள்வி கேட்டால் பதில் சொல்ல மறுக்கிறார்கள். மாற்று இடம் குறித்து கூட எதுவும் பேசவில்லை” என்று ரமேஷ் கூறினார்.