திருவள்ளூர், நவ. 27- திருவள்ளூர் மாவட்ட தலைநகரில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாளுக்கு ரகசிய தகவல்கள் வந்த வண்ணம் இருந்தன. திருவள்ளூர் டோல்கேட் அருகே ஊத்துக்கோட்டை சாலையில் சோதனை செய்தபோது சந்தேகத்திற்கிடமாக 3பேர் நின்று கொண்டிருந்திருந்தனர்.
இதையடுத்து அவர்களை பிடித்து விசாரணை செய்ததில் அவர்கள் பூண்டி கிராமத்தை சேர்ந்த ஜீவா (20), காக்களூர் பகுதியைச் சேர்ந்த சஞ்சய் (21), டோல்கேட் பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் என்கிற டேவிட் (21) என்பது தெரிய வந்தது. அவர்களிடம் சோதனை செய்தபோது பள்ளி மாணவர்களுக்கு விற்பனை செய்வதற்காக 100 கிராம் கஞ்சா வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து மூன்று பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 100 கிராம் கஞ்சா, 4 செல்போன் மற்றும் 2 மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்து மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.