tamilnadu

img

அன்றாட வாழ்வில் அறிவியலின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு

அன்றாட வாழ்வில் அறிவியலின் 
முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு 

சிதம்பரம், மார்ச் 1-  சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில்   தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்பட்டது.  பதிவாளர் முனைவர் மு.பிரகாஷ் வர வேற்றார். துணைவேந்தர் அருட்செல்வி தலைமை தாங்கி பேசுகையில், அறிவியல்  மற்றும் புதுமைகள் உலகளாவிய  மாற்றத்திற்கு இந்திய இளைஞர்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.  இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் புதுச்சேரி பேராசிரியரும், விஞ்ஞானியு மான ஹோட்டி  விஞ்ஞானி பேசுகையில், அறி வியல் தினத்தின் முதன்மையான குறிக்கோள்கள், அன்றாட வாழ்வில் அறிவியலின் முக்கியத்துவம் குறித்து புதிய தொழில்நுட்பங்களின் உதவி யுடன் அறிவியலின் பங்களிப்பு பற்றி மாண வர்களிடையே விளக்கமாக எடுத்து ரைத்தார். இந்த நிகழ்ச்சியில், கடந்த ஆண்டுக்கான சிறந்த ஆராய்ச்சியாளர் விருது மற்றும் சிறந்த நிதி திரட்டல் ஆராய்ச்சி யாளர் விருது பல்கலைக்கழக ஆசிரியர்க ளுக்கு வழங்கப்பட்டன. மேலும் பல்கலைக் கழக அளவில் நடைபெறும் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள் பரிசுகள் வழங்கப்பட்டன. அண்ணாமலைப் பல்கலைக்கழக அறிவியல் துறையின் முதல்வர் ஸ்ரீராம் நன்றி கூறினார்.  தேர்வுத்துறை கட்டுப்பாட்டு அதிகாரி ஆர்.எஸ் குமார், புல முதல்வர்கள், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், இயக்குநர்கள், ஆசிரியர் அல்லாத அலு வலர்கள், ஊழியர்கள், மக்கள் தொடர்பு அதிகாரி மற்றும் பல்வேறு துறை மாண வர்கள் கலந்து கொண்டனர்.