சென்னை,அக்.5- தொழிற்சங்க உரிமைக்காக போராடி வரும் சாம்சங் தொழிலா ளர்களுக்கு ஆதரவாக அக்டோபர் 15 ஆம் தேதி மாநிலம் முழுவதும் உண்டியல் ஏந்தி வசூலில் ஈடுபட சிஐடியு மாநில நிர்வாகக்குழு முடிவு செய்துள்ளது.
சிஐடியு மாநில நிர்வாகக்குழு கூட்டம் அக்டோபர் 3,4 ஆகிய தேதிக ளில் கடலூரில் மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் தலைமையில் நடை பெற்றது. இக்கூட்டத்தில் சிஐடியு அகில இந்திய தலைவர் டாக்டர் எச். ஹேமலதா, மாநில பொதுச்செய லாளர் ஜி.சுகுமாறன், பொருளாளர் மாலதி சிட்டிபாபு, உதவி பொதுச்செய லாளர்கள் வி.குமார், கே.திருச் செல்வன், எஸ்.கண்ணன், கே. ஆறுமுக நயினார் உட்பட மாநில நிர்வா கிகளும், நிர்வாகக்குழு உறுப்பினர்க ளும் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அம்சங்கள் வருமாறு:
காஞ்சிபுரம் மாவட்டம் சுங்கு வார்சத்திரத்தில் இயங்கி வரும் சாம்சங் எலக்ட்ரானிக் நிர்வாகம் தொழிற்சங்கத்தை ஏற்க மறுப்பதை எதிர்த்தும், தமிழ்நாடு தொழிலாளர் துறை சங்கத்தை பதிவு செய்ய காலங் கடத்துவதை கண்டித்தும் சாம்சங் தொழிலாளர்கள் 25 நாட்களுக்கு மேலாக நடத்தி வரும் வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு சிஐடியு மாநில நிர்வாகக்குழு ஆதரவை தெரிவித்துக்கொள்கிறது.
இப்பிரச்சனையில் கூடிய விரைவில் சுமூகத் தீர்வு ஏற்படும் என முதலமைச்சர் அறிவித்து ஒரு வார கால மாகியும் இதுநாள் வரை சங்கத்தை பதிவு செய்யவில்லை. தொழிற்சங்க உரிமைக்காக போராடிவரும் சாம்சங் தொழிலாளர்களுக்கு பல்வேறு தொழிற்சங்கங்களும், ஜனநாயக அமைப்புகளும், அரசியல் கட்சிக ளும் ஆதரவு தெரிவித்து வரு கின்றன.
மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் நடத்தவிருந்த ஆதரவு ஆர்ப்பாட் டத்திற்கு காவல் துறை அனுமதி மறுத்தது மட்டுமல்ல, மாநிலத்தின் பல பகுதிகளில் சாம்சங் நிர்வாகத்தைக் கண்டித்து ஜனநாயக ரீதியிலான போராட்டங்களுக்கும் காவல்துறை அனுமதி மறுத்து வருகிறது.
தென்னிந்தியாவில் முதன் முதலாக உழைப்பாளிகளின் தினமான மே தினத்தை கொண்டாடிய பெருமை யும், இந்தியாவில் முதல் பதிவு செய்யப்பட்ட தொழிற்சங்கம் என்ற பெருமையும் கொண்ட தமிழ்நாட்டில் தற்போது சங்கம் சேரும் உரிமை மறுக்கப்படுகிறது.
பன்னாட்டு முதலீடுகளை ஈர்ப்ப தில் மற்ற மாநிலங்களை காட்டிலும் அதிக ஆர்வம் கொண்ட மாநிலமாக தமிழ்நாடு அரசின் தொழில் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. இது தமிழ்நாட்டில் தொழிலாளர் பணி நிலைமைகளில், உரிமைகளில் எதிர் மறையான தாக்கத்தை உருவாக்கி யுள்ளது என்பதை ஆட்சியாளர்கள் உணர மறுப்பதின் விளைவின் ஒரு பகுதி தான் சாம்சங் தொழிலாளர்க ளின் சங்கம் வைக்கும் உரிமைக்கான போராட்டமாகும்.
பன்னாட்டு நிறுவனத்தை எதிர்த்து உறுதியுடன் போராடி வரும் சாம்சங் தொழிலாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவு மட்டுமல்ல, நிதி உதவியும் செய்வது என்று சிஐடியு மாநில நிர்வாக்குழு முடிவு செய்துள்ளது. அதனடிப்படையில் அக்டோபர் 15 ஆம் தேதி மாநிலம் முழுவதும் பொது மக்களிடம் உண்டியல் வசூல் செய்வது என்றும், தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேள னத்தின் சார்பில் அக்டோபர் 8 ஆம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் பேருந்து நிலையங்களில் போராட்ட ஆதரவு நிதி வசூல் செய்வது என்றும் முடிவு செய்யப்பட்டது.