tamilnadu

அக். 21-ல் ஆணையர் அலுவலகம் முற்றுகை.... மாற்றுத்திறனாளிகள் சங்கம் அறிவிப்பு

சென்னை:
உதவித் தொகை பெற தடை விதிக்கும் சட்ட விரோத விதிமுறைகளை நீக்கம் செய்வதாக அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற அதிகாரிகளை கண்டித்து அக்டோபர் 21 அன்று சென்னை எழிலகத்தில் உள்ள ஆணையர் அலுவலகத்தை மாற்றுத்திறனாளிகள் முற்றுகையிடுகின்றனர்.இதுகுறித்து மாற்றுத்திறனாளி சங்கத்தின் கூட்டமைப்பு விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

சமூகப்பாதுகாப்பு திட்டத்தின் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர பராமரிப்பு உதவித் தொகை பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் வசதியை தமிழக அரசு நடைமுறைப்படுத்தி உள்ளது.இந்த நடைமுறையில் மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டத்திற்கும், 2018 சமூகநலத்துறை அரசாணை எண் 41-ற்கு விரோதமாகவும் விதிமுறைகள் பின்பற்றப்படுவதால் கடந்த செப்.16 மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்த கூட்டியக்கம் ஆயத்தமானது.அதனை தொடர்ந்து, செப்.15 அன்று மாற்றுத்திறனாளிகள் நல மாநில ஆணையர் ஜானி டாம் வர்கீஸ் முன்னிலையில், சமூகப் பாதுகாப்பு திட்ட இயக்குநர் வெங்கடாச்சலம கூட்டியக்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.அரசாணை எண்.41-ன்படி மாவட்ட ஆட்சி தலைவர்கள் தலைமையிலான வயது தளர்வு குழு இல்லாமல் 40 விழுக்காட்டிற் கும் மேல் ஊனமுற்ற 18வயதுக்கு கீழ் உள்ளளவர்களுக்கும் உதவித் தொகை வழங்குவதற்கும், 100 விழுக்காட்டிற்கு கீழ் உள்ள பார்வை, செவித்திறன் மாற்றுத் திறனாளிகளுக்கும் உதவித் தொகை வழங்குவதற்கும், 75 விழுக்காட்டிற்கு மேல் உள்ள பார்வை செவித்திறன் பாதித்தவர்கள் உள்ளிட்டோருக்கு கடும் ஊனமுற்றோருக் கான உதவித் தொகை ரூ.1,500 மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் வழங்குவதற்கும் உயர் அதிகாரிகளின் ஒப்புதல் பெற்று நடைமுறைப் படுத்துவதாகவும் வாக்குறுதி அளித்தார். இதற்கு ஒரு மாத கால அவகாசம் வேண்டுமெனவும் கோரினார். மேலும், பயனாளிகள் இ-சேவை மையங்களுக்கு செல்லாமல் நேரடியாக விண் ணப்பிக்க 10 நாட்களில் சிட்டிசன் போர்ட்டல் உருவாக்கப்படும் என்றும், இ-சேவை மையங்களில் அதிக கட்டணம் வசூலிப்பது,தடையற்ற சூழலை உருவாக்குவது உள்ளிட்ட பிரச்சனைகளை தீர்ப்பதற்கும், ஏடிஎம்வசதி உள்ளிட்டவை உடனடியாக வழங்கப்படும் என்றும் வாக்குறுதி அளித்தார். சகப் பாதுகாப்பு திட்ட இயக்குனர் கோரிய ஒரு மாத கால அவகாசம் முடிந்துவிட்ட நிலையில், அவருடைய வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை.மாறாக, கல் வீடு இருந்தால் உதவித்தொகை மறுப்பது, உதவித் தொகை விண்ணப்பிக்க நடைமுறைக்கு வராத பல்நோக்கு சான்று கேட்பது, போன்ற சட்டவிரோத, அரசாணை விரோத விதிமுறைகள கீழ்மட்ட அதிகாரிகள் நடைமுறைப்படுத்துகின்றனர்.  இதனால் மாற்றுத்திறனாளிகள் கடுமையாக பாதிக் கின்றனர்.

எனவே, கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றக் கோரி அக்.21 புதனன்று சென்னை சேப் பாக்கத்தில் உள்ள வருவாய் நிர்வாக ஆணையர் அலுவலகத்தில் (எழிலகம்) கோரிக்கை நிறைவேறும் வரை காத்திருக்கும் போராட்டம் நடத்த மாற்றுத்திறனுடையோர் சங் கங்களின் கூட்டியக்கம் முடிவெடுத்துள்ளது.இப்போராட்டத்தில் பெருந் திரளான அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளும் பங்கேற்க கூட்டியக்கம் அறைகூவல் விடுக்கிறது.