மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் பி.எம்.கவிரிதேவியின் தாயாரும், சி.ஐ.டி.யு. மாவட்ட துணைத் தலைவர் பி.என்.உண்னியின் மாமியார் எம்.மதுரம்மாள் (87) உடல்நலக் குறைவால் சனிக்கிழமை காலமானார். அவரது உடலுக்கு சி.பி.எம். மாவட்டச் செயலாளர் எல்.சுந்தர்ராஜன், செயற்குழு உறுப்பினர்கள் டி.கே.சண்முகம், எஸ்.கே.மகேந்திரன், எம்.ராமகிருஷ்ணன், சி.திருவேட்டை, இரா.முரளி, மாவட்டக் குழு உறுப்பினர்கள் சு.லெனின்சுந்தர், சு.பால்சாமி, எம்.ஆர்.மதியழகன், குப்புசாமி, ஏ.ஜி.காசிநாதன், முன்னாள் எம்.பி.எஸ்.ஆர்.விஜயகுமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெ.சி.டி.பிரபாகரன், அதிமுக மாவட்டச் செயலாளர் டி.ஜி.வெங்கடேஷ்பாபு உள்ளிட்ட அனைத்து கட்சி தலைவர்களும், உறவினர்களும், நண்பர்களும் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். ஞாயிறன்று அவரது உடல் சிட்கோ நகர் அருகே உள்ள சுடுகாட்டில் தகனம் செய்யப்பட்டது.