சென்னை, ஜூன் 5 -மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மயிலைப்பகுதி, விசாலாட்சி தோட்டம் கிளை (123வது வட்டம்) முன்னாள் செயலாளரும், ஆவடி பகுதி திருமுல்லைவாயில் கிளை உறுப்பினருமான தோழர் ஆர்.ராதாகிருஷ்ணன் உடல்நலக்குறைவால் செவ்வாயன்று (ஜூன் 4) காலமானார். அவருக்கு வயது 45.திருமுல்லைவாயில் அனுமன்நகரில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த உடலுக்கு கட்சியின் தென்சென்னை மாவட்டச்செயற்குழு உறுப்பினர் எஸ்.குமார், ஆவடி பகுதிச் செயலாளர் ராஜன், தமுஎகச தென்சென்னை மாவட்டத் தலைவர் சி.எம்.குமார், விசாலாட்சி தோட்டம் கிளைச் செயலாளர் ரமேஷ் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். அன்னாரது உடல் புதனன்று (ஜூன் 5) திருமுல்லை இடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது.