மதுரை, ஜூன் 25- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மதுரை புற நகர் மாவட்டக்குழு முன்னாள் உறுப்பி னரும், திருமங்க லம் தாலுகாகுழு உறுப்பினருமான புங்கங்குளம் அய்யாவு வியாழன்று காலை காலமானார். இவர் 50 ஆண்டுகாலமாக மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியில் பணியாற்றி பல்வேறு பொறுப்புகளை திறம்பட நிறைவேற்றி யுள்ளார். கட்சி நடத்திய பல்வேறு போராட் டங்களில் பங்கேற்றுள்ளார். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தை திருமங்கலம் தாலுகாவில் பல்வேறு கிராமங்களில் உருவாக்கியதில் அய்யாவுக்கு முக்கியப்பங்குண்டு.