சென்னை, டிச. 12 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தென்சென்னை போக்கு வரத்து இடைக்குழு உறுப்பினர் தோழர் எஸ்.சகாய பிலான்ஸ் உடல்நலக் குறைவால் திங்களன்று (டிச.2) காலமானார். அவருக்கு வயது 52. தாம்பரத்தை அடுத்த வேங்கடமங்கலத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த உடலுக்கு கட்சியின் தென்சென்னை மாவட்டச் செயற்குழு உறுப்பினர் செந்தில்குமா, மாவட்டக்குழு உறுப்பினர் கருணாகரன், அரசாங்க போக்கு வரத்து ஊழியர் சங்கத் தலைவர் ஆர்.துரை, பொதுச் செய லாளர் தயானந்தன், சிஐடியு தென்சென்னை மாவட்டச் செயலாளர் பா.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். அன்னாரது உடல் செவ்வாயன்று (டிச.2) இறுதி நிகழ்ச்சி நடைபெற்றது.