சென்னை,மே 24சென்னை மாநகராட்சி செங்கொடி சங்கத்தின் பொதுச்செயலாளர் சீனிவாசலு தாயார் பிச்சம்மா என்கிற லட்சுமி உடல் நலக்குறைவால் வெள்ளியன்று (மே 24) அதிகாலை சென்னையில் காலமானார். அவருக்கு வயது 80. வேப்பேரி, 6 சுப்பையா தெருவில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்ட அன்னாரது உடலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வடசென்னை மாவட்டச் செயலாளர் எல்.சுந்தரராசன், பகுதிச்செயலாளர் கே.முருகன், சிஐடியு வடசென்னை மாவட்டச் செயலாளர் சி.திருவேட்டை, மணிமேகலை, பிரின்ஸ்கஜேந்திரபாபு, சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், சென்னை செங்கொடி சங்க நிர்வாகிகள், மாநகராட்சி துப்புரவுத் தொழிலாளர்கள் உள்ளிட்ட பலர் இறுதி அஞ்சலி செலுத்தினர். பிச்சம்மாளுக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். வெள்ளியன்று மாலை ஓட்டேரி மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.