மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய சென்னை மாவட்டக்குழு உறுப்பினர் எம்.வி.கிருஷ்ணனின் மருமகன் பாலச்சந்தர் மாரடைப்பால் புதனன்று (டிச.11) காலமானார். அவருக்கு வயது 53. நங்கநல்லூரில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர் அ.சவுந்தரராசன், மாநில செயற்குழு உறுப்பினர் ப.செல்வசிங், பெ.சண்முகம், க.கனகராஜ், வடசென்னை மாவட்டச் செயலாளர் எல்.சுந்தரராஜன், மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா உள்ளிட்டோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.