tamilnadu

img

வீட்டுமனை பட்டா பெறாதவர்களுக்கு தகுதி அடிப்படையில் வழங்க அறிவுறுத்தல்

வீட்டுமனை பட்டா பெறாதவர்களுக்கு
 தகுதி அடிப்படையில் வழங்க அறிவுறுத்தல்

நகர்ப்புற பகுதிகளில் வரன்முறைப்படுத்தி வீட்டுமனை பட்டா வழங்குதல் தொடர்பாக கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. பிறகு செய்தியாளர்களிடம் ஆட்சி யர் கூறுகையில், ஏழை-எளிய மக்க ளுக்கு பட்டா வழங்க தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன் அடிப்படையில் நகர்ப்புற பகுதிகளில் வரன்முறைப்படுத்தி வீட்டுமனை பட்டா வழங்குவது தொடர்பாக அனைத்து வட்டாட்சியர்களின் ஆய்வு செய்யப்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் அனைத்து வட்டங்களிலும் உள்ள புறம்போக்கு நிலங்கள் மற்றும் பட்டா இல்லாத நிலங்கள் அரசு விதி முறைகளுக்கு உட்பட்டு முறை யாக கணக்கெடுப்பு செய்ய வட்டாட்சி யர்களுக்கு  அறிவுறுத்தப்பட்டது. மேலும் நகர்புறங்களில் வீடுகள் கட்டி,வீட்டுமனைப் பட்டா பெறாத நபர்களை கணக்கீடு செய்து தகுதியின் அடிப்படையில் வீட்டு மனைப் பட்டாக்கள் வழங்கு அறி வுறுத்தப்பட்டது. மேலும் ஆண்டு வருமானம் குறைந்த பட்சம் ரூ.3 லட்சத்திற்கு குறைவான வருமானம் உள்ள நபர்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்குவது தொடர்பாக, முறையாக வரையறை செய்து, அரசின் விதிமுறைகளுக்குட்பட்டு வீட்டு மனைப் பட்டாக்கள் வழங்க தேவை யான நடவடிக்கைகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார். மாவட்ட வருவாய் அலுவலர் ஜீவா, திருக்கோவிலூர் சார் ஆட்சியர் ஆனந்த் குமார் சிங், அனைத்து வட்டாட்சியர்கள் உள்ளிட்ட வரு வாய்த் துறை அலுவலர்கள் உடனி ருந்தனர்.