நவம்பர் 15ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மகாவீரர் நினைவு நாளை முன்னிட்டு, அனைத்து இறைச்சிக் கடைகளை மூட சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூரியதாவது;
பெருநகர சென்னை மாநகராட்சி, பொது சுகாதாரத்துறை (கால்நடை மருத்துவப் பிரிவு) கட்டுப்பாட்டில் இயங்கும் இறைச்சிக் கடைகள் அனைத்தும் வருகின்ற நவம்பர் 15ஆம் (ஞாயிற்றுக்கிழமை) அன்று மகாவீர் நினைவு நாளை முன்னிட்டு அரசு உத்தரவின்படி மூடப்படுகின்றன.
மேலும், பல்பொருள் அங்காடிகள், வணிக வளாகங்களில் பதப்படுத்திய இறைச்சி விற்பனை செய்யவும் தடை செய்யப்பட்டுள்ளது.
அரசு உத்தரவினைச் செயல்படுத்த வியாபாரிகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்குமாறு ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.