tamilnadu

img

2 ஆம் கட்ட கலைஞர் மகளிர் உரிமைத் தொகை

தமிழ்நாட்டில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் ‘கலை ஞர் மகளிர் உரிமைத் தொகை’ திட்டத்தை முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதி தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின்கீழ் முதல்கட்டமாக 1 கோடியே  6 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு ரூ.1,000 வழங்கப் பட்டது.

இதற்கிடையே, இந்த திட்டத்தில் விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டவர்கள் மேல்முறையீடு செய்ய வாய்ப்பு அளிக்கப்பட்டது. அத்துடன், விடுபட்டவர்  களும் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் இதுவரை  11.85 லட்சம் விண்ணப் பங்கள் வந்துள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித் திருந்தது.

இதையடுத்து மேல் முறையீடு மற்றும் புதிதாக விண்ணப்பித்துள்ள 11.85 லட்சம் மகளிரின் விண்ணப் பங்கள் பரிசீலிக்கப்பட்டன. மேலும் தீபாவளி பண்டிகை  வருகிற 12 ஆம் தேதி வருவதால் முன்கூட்டியே உரிமைத் தொகையை விடுவிப்பது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகையான ரூ.1,000 வழங்கும் திட்டத்தின் 2ம்  கட்டத்தை நவ.10 ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை  கலைவாணர் அரங்கில்  தொடங்கி வைக்கிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.