சென்னை,நவ.7- தீபாவளிக்கு சென்னையில் இருந்து வெளியூருக்கு செல்ல 6 இடங்க ளில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தீபாவளியையொட்டி சென்னை, கோவை உள்ளிட்ட வெளியூர்களில் வேலை செய்யும் பிற மாவட்டத்தினர் தங்களது சொந்த ஊர்களுக்கு செல் வர். இதனால், பொதுமக்கள் எந்தவித சிரமமும் இன்றி சென்று வர சிறப்பு பேருந்துகளை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இந்த சிறப்பு பேருந்துகள் நவம்பர் 9 ஆம் தேதி முதல் இயக்கப்படுகிறது. இதற்காக சென்னையில் மட்டும் கோயம்பேடு பேருந்து நிலையம், பூந்த மல்லி பேருந்து நிலையம், தாம்பரம் மெப்ஸ் பேருந்து நிலையம், தாம்பரம் ரயில் நிலையம் பேருந்து நிலையம், கே.கே.நகர், மாதவரம் பேருந்து நிலையம் ஆகிய 6 இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும்.
மேலும், நகரின் முக்கியப் பேருந்து நிலையங்களில் இருந்து தற்காலிக பேருந்து நிறுத்தங்களில் செல்லும் வகையில் மாநகரப் போக்குவரத்து கழகம் சார்பில் இணைப்பு பேருந்து கள் இயக்கப்படவுள்ளன.
கோயம்பேடு பேருந்து நிலையத்தி லிருந்து சேலம், திருச்சி, மதுரை, கோவை, திருநெல்வேலி, கன்னியா குமரி, திருவண்ணாமலை செல்லும் பேருந்துகள். மாதவரம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து செங்குன்றம் வழி யாக ஆந்திர மாநிலத்திற்கு செல்லும் பேருந்துகள் இயக்கப்படுகிறது.
தாம்பரம் சானடோரியம் பேருந்து நிலையத்திலிருந்து திண்டிவனம், விக்கிரவாண்டி வழியாக கும்பகோ ணம், தஞ்சாவூர் செல்லும் பேருந்துகள், தாம்பரம் ரயில் நிலையம் பேருந்து நிறுத்தத்தில் இருந்து திண்டிவனம், செஞ்சி, வந்தவாசி வழியாக திரு வண்ணாமலை செல்லும் பேருந்துகள் இயக்கப்படுகிறது.
கலைஞர் கருணாநிதி நகர் (கே.கே.நகர்) பேருந்து நிலையத்திலிருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக புதுச்சேரி, கடலூர் மற்றும் சிதம்பரம் போன்ற ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள் பூவிருந்தவல்லி பணிமனை பேருந்து நிலையத்தில் இருந்து பூவிருந்தவல்லி வழியாக காஞ்சிபுரம், செய்யாறு, ஆற்காடு, ஆரணி, வேலூர், தருமபுரி, கிருஷ்ண கிரி, திருப்பத்தூர் செல்லும் பேருந்து கள் இயக்கப்படுகிறது.
பேருந்து பயண முன்பதிவிற்கு சென்னையில் 11 இடங்களில் முன்பதிவு மையங்கள் செயல்பட உள்ளன. தற்போது வரை 68000 பேர் முன்பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி யுள்ளது.
மேலும், சென்னையில் இருந்து கார் மற்றும் இதர வாகனங்கள் மூலம் சொந்த ஊர் செல்வோர் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் தாம்பரம், பெருங்களத்தூர் வழியாக செல்வதை தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக, திருப்போரூர்- செங்கல்பட்டு வழி அல்லது வண்டலூர் வெளிவட்ட சாலையை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.