நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது!
சென்னை, மே 2- “தனியார் வாக னங்களில் அரசால் அங்கீகரிக்கப்படாத ஸ்டிக்கர்களை ஒட் டக்கூடாது. விதிமீற லில் ஈடுபடுபவர்கள் மீது வரும் மே 2-ம் தேதி முதல் மோட்டார் வாகன சட்டத் தின்படி கடும் நடவடிக்கை எடுக்கப் படும்” என போக்குவரத்து காவல் கூடு தல் ஆணையர் ஆர். சுதாகர் ஏப்ரல் 27 அன்று சுற்றறிக்கை வெளியிட்டார்.
இதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்பும், ஆதரவும் சம அளவில் எழுந்த நிலையில், சம்பந்தப்பட்ட துறை யை சேர்ந்தவர்கள் மட்டும் பிரஸ், போலீஸ், டாக்டர், வழக்கறிஞர், உயர் நீதிமன்றம், தலைமைச் செயலகம், ஆர்மி என தங்களது வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்ள போக்கு வரத்து போலீசார் அனுமதி அளித்தனர். அதேநேரம் நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர் ஒட்ட விதிக்கப்பட்ட தடை மே 2 முதல் அமலுக்கு வந்துள்ளது.
தஞ்சை பெரிய கோயில் பற்றி அவதூறு பரப்புவதா?
அறநிலையத்துறை எச்சரிக்கை
சென்னை, மே 2- ஒன்றிய அரசின் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள தஞ்சை பெரு வுடையார் கோயிலின் அடித்தளத்தை அசைக்கும் வகையில் இந்து சமய அறநிலையத்துறையால் பணிகள் மேற் கொள்ளப்படுவதாக சமூக வலைதளங் களில் அவதூறு பரப்பும் வகையில் காணொளி காட்சி வெளியிட்ட நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது.
போதைப் பொருள் சப்ளை
டி.ஜெயகுமாரின் உறவினர் கைது!
சென்னை, மே 2- வடக்கு மண்டல தனிப்படை காவல் துறைக்கு கிடைத்த தகவலின் பேரில், பழைய வண்ணாரப்பேட்டை கல்லறை சாலையை சேர்ந்த காதர் மொய்தீன் என் பவரை கைது செய்து போலீசார் ரூ.30 ஆயிரம் மதிப்பிலான 8 கிராம் மெத்தா பெட்டமைன் என்ற போதை மாத்திரை கள் பறிமுதல் செய்தனர். மேலும், மொய் தீன் அளித்த தகவலின் அடிப்படையில் சுல்தான், அலாவுதீன் ஆகியோரையும் மற்றும் அவர்கள் அளித்த தகவலின் பேரின் மூலகர்த்தவான திருவான்மியூ ரைச் சேர்ந்த ராகுலையும் கைது செய்த னர். இவர் அதிமுக முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமாரின் நெருங்கிய உற வினர் என்பது தெரியவந்துள்ளது.
ஆவின் மோர் விற்பனை 25 விழுக்காடு அதிகரிப்பு
சென்னை, மே 2- ஆவின் நிறுவனம் பால் மட்டுமின்றி வெண்ணெய், நெய், தயிர், இனிப்பு வகை கள், மில்க் ஷேக், ஐஸ்கிரீம் உட்பட 200-க்கும் மேற்பட்ட பால் பொருட்கள் விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தினசரி 30 ஆயிரம் பாட்டில் மோர் விற்பனையானது, இந்த ஆண்டு ஏப்ரலில் தினசரி 40 ஆயிரம் பாட்டில் மோர் விற்பனையாகி உள்ளது. இது போன்று பாக்கெட் மோர் விற்பனையும் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தினசரி 10 ஆயிரம் பாக்கெட் மோர் விற்பனையான நிலையில் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தினசரி 18 ஆயிரம் பாக்கெட் மோர் விற்பனையாகி உள்ளது.
இது தவிர லெஸ்சி, குல்பி ஐஸ், கப் ஐஸ், கோன்ஐஸ், பாதாம் கீர் பாட்டில் விற்பனையும் இருமடங்கு அதிகரித் துள்ளதால் இதன் உற்பத்தியை அதி கரிக்க தேவையான ஏற்பாடுகள் செய் யப்பட்டுள்ளதாக ஆவின் அதிகாரிகள் தெரிவித்தனர்.
புதிதாக குடும்ப அட்டைகள் வழங்க அரசு நடவடிக்கை
சென்னை, மே 2- 2021-ஆம் ஆண்டு நிலவரப் படி தமிழ்நாட்டில் 2 கோடியே 10 லட் சம் குடும்ப அட்டை கள் இருந்தன. அதன்பின் 2022-ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 10 லட்சம் அதிகரித்து 2 கோடியே 20 லட்சம் ஆனது. தற்போ தைய நிலவரப்படி மொத்தம் 2 கோடியே 24 லட்சத்து 19 ஆயிரத்து 359 அட்டை கள் உள்ளன.
இதற்கிடையில் மகளிர் உரிமை தொகைத் திட்டம் செயல்பாட்டுக்கு வரும் வேளையில் புதிய அட்டைகள் வழங்கு வதை அரசு தற்காலிகமாக நிறுத்தி வைத்தது. பின்னர் விண்ணப்பங்களை பெறத் துவங்கியது. இதில், சுமார் 2 லட் சத்து 40 ஆயிரம் குடும்பங்கள் புதிதாக குடும்ப அட்டை கேட்டு விண்ணப்பித்து உள்ளனர்.
தற்போது மக்களவைத் தேர்தலும் முடிந்து விட்ட நிலையில், இந்த விண் ணப்பங்களை ஆய்வுசெய்து, நட வடிக்கை எடுக்கும்படி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தேர்தல் நடைமுறை கள் ஜூன் 5 அன்று முழுமையாக விலக் கிக் கொள்ளப்பட்ட பின்பு அனைத்து மாவட்டங்களிலும் புதிய குடும்ப அட்டை கள் வழங்கும் பணிகள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அக்னி நட்சத்திரம் நாளை துவங்குகிறது!
சென்னை, மே 2- ‘அக்னி நட்சத்திரம்’ என்று கூறப் படும் உச்சபட்ச கோடை வெயில் காலம் ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் வாட்டி வதைப்பது வழக் கம். அந்த வகையில் நடப்பாண்டு, ‘அக்னி நட்சத்திரம்’ மே 4 அன்று தொடங்கி மே 28 வரை, 25 நாட்க ளுக்கு தொடர்ந்து வாட்டி வதைக்க காத்திருக்கிறது.
பொதுவாக கோடைக்காலத் தில்- குறிப்பாக மே மாதத்தில் வெயி லின் தாக்கம் அதிகமாக இருக்கும். ஆனால் இந்தாண்டு மார்ச் மாதத்தி லிருந்தே வெப்பத்தின் தாக்கம் அதி கமாக உள்ளது.
22 இடங்களில் சதம் அடித்த வெயில்
மே 2 அன்று 1.30 மணி நிலவரப் படி சென்னை, திருவள்ளூர் மாவட் டம், திருநின்றவூர், காஞ்சிபுரம், விழுப்புரம் மாவட்டம், மயிலம், ராணிப்பேட்டை மாவட்டம், கலவை, வேலூர் மாவட்டம், விரிஞ்சி புரம், திருப்பத்தூர், திருவண்ணா மலை, கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டம், சிதம்பரம், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டம், வம் பன், கரூர் மாவட்டம், கடவூர் தாலுகா அலுவலகம், திருச்சி மாவட்டம், சிறுகமணி, சேலம் மாவட்டம், சந்தி யூர், ஈரோடு, கிருஷ்ணகிரி மாவட் டம், பையூர், திருப்பூர், கோவை, சிவகங்கை, விருதுநகர், தென்காசி ஆகிய 22 மாவட்டங்களில் 100 டிகிரியை தாண்டி வெப்பம் பதி வாகி உள்ளது.
இதனிடையே, மார்ச் 4, 5 ஆகிய தேதிகளில் 19 மாவட்டங்களுக்கு வெயில் சுட்டெரிக்கும் என்பதற் காக மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக் கப்பட்டுள்ளது.