ஹிஜாப் அணியகூடாது என்று யாரும் நிர்பந்திக்க முடியாது என இயக்குனர் நவின் தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் இந்துத்துவ அமைப்பினர் பள்ளிகளில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர கூடாது என பல இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வந்தால் , நாங்களும் காவித்துண்டு அணிந்து வருவோம் என கூறி பல கல்லூரிகளில் இந்துத்துவ மாணவ அமைப்பினர் காவித்துண்டுகளை அணிந்து ஜெய்ஸ்ரீராம் முழக்கமிட்டு ஒரு மதக்கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர்.இதனால் பல கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர கூடாது என இந்துத்துவ மாணவ அமைப்பினர் கூறுவதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். ஹிஜாப் அணிவது அவர்களின் உரிமை இதில் யாரும் தலையிட கூடாது. சங்-பரிவாரங்களின் மத அரசியலை பள்ளி மாணவர்களிடம் புகுத்தி அரசியல் லாபம் தேடக்கூடாது என பல்வேறு பரப்பினர் சங்-பரிவார அமைப்பினருக்கு கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இயக்குனர் நவின் தனது ட்விட்டர் பதிவில், தாலி, ஜிஹாப் இரண்டையும் பெண்ணடிமைதனமாகவே நான் பார்க்கிறேன். ஆனால் எப்படி தாலி கட்டிக்க கூடாது என்று நிர்பந்திக்க முடியாதோ, அப்படியே ஹிஜாப் அணியகூடாது என்றும் நிர்பந்திக்க முடியாது. இஸ்லாமியராக பிறந்த என் தாய் பர்தா அணியவில்லை. ஹிந்துவாக பிறந்த என் மனைவி தாலி கட்டிக்க மறுத்தார்.
ஆனால், அது இரண்டும் அவர்கள் எடுத்த முடிவு. யாருடைய ஆதிக்கத்தாலும் நிர்பந்திக்கபட்டவை அல்ல. பெண்கள் என்ன ஆடை உடுத்த வேண்டும் என்பதை அந்த பெண்களே முடிவு செய்ய வேண்டும். இதில் உத்தரவிட தந்தைக்கோ, கணவனுக்கோ இந்த சமூகத்திற்கோ உரிமை இல்லை என அதில் அவர் கூறியுள்ளார்.