tamilnadu

img

3 தொகுதி இடைத்தேர்தல் குறித்து  எந்த முடிவும் எடுக்கப்படவில்லை

சென்னை:
தமிழகத்தில் காலியாக உள்ள 3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவது பற்றி எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று தலைமைத்தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ கூறியுள்ளார்.

தமிழகத்தில் சேப்பாக்கம்-திருவல்லிக் கேணி, திருவொற்றியூர் மற்றும் குடியாத் தம் தொகுதிகள் காலியாக உள்ளன. இத்தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் குறித்து தமிழக தலைமைத்தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ கூறுகையில், 3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவது பற்றி எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. தேதி முடிவு செய்யவில்லை என்றாலும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயாராக உள்ளது. வாக்குப்பதிவு இயந்திரங்களை தயார் செய்வது குறித்து காணொலி காட்சி மூலம் ஆலோசனை செய்யப்பட்டது என்றார்.

;