10, 11, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தேதியில் மாற்றமில்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 1 ஆம் தேதி தொடங்கி மார்ச் 22-ஆம் தேதி வரையிலும், 11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 4-ஆம் தேதி தொடங்கி மார்ச் 25-ஆம் தேதி வரையிலும், 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் 26 இல் தொடங்கி ஏப்ரல் 8 ஆம் தேதி வரையிலும் நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது.
இந்த நிலையில், மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளதால் 10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு கால அட்டவணையில் மாற்றம் இருக்குமா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்குப் பதிலளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் 10,11,12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதியில் மாற்றமில்லை என்று தெரிவித்தார். தேர்வுக்கான அனைத்து விதமான அட்டவணையும் தேர்தல் ஆணையத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளதால், அதற்கு ஏற்றார் போலத்தான் மக்களவை தேர்தல் தேதி இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.