tamilnadu

img

எந்த சாதி என கட்சித்தலைவர் கேள்வி எழுப்புவது வேதனைக்குரியது கிருஷ்ணசாமி பேச்சு குறித்து திருமாவளவன் கருத்து

சென்னை,மே 29-புதிய தமிழகம் கட்சி யின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி மே 28 அன்று சென்னையில் அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப்பேசினார். அப்போது, தேர்தலில் தோல்வியுற்றதற்குத் தமிழக ஊடகங்கள்தான் காரணம் என்று குற்றச்சாட்டுகளை  கிருஷ்ணசாமி அடுக்கினார்.மேலும் தன்னிடம் கேள்வியெழுப்பிய செய்தியாளரி டம் ‘நீ எந்த ஊரு? நீ என்னசாதி?’ எனக் கேள்விகளை எழுப்பி ஒருமையில் பேசி னார். இதுகுறித்து விடுதலைச்சிறுத்தைகள் கட்சித் தலைவரும், சிதம்பரம் நாடாளு மன்ற உறுப்பினருமான திரு மாவளவன் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறு கையில், செய்தியாளர் சந்தி ப்பில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு புதியதமிழகம் கட்சித் தலைவர் சாதிப் பெயரைச் சுட்டிக்காட்டி கேள்வி எழுப்பியதாக உங்கள் மூலம் நான் அறி கிறேன்.  கட்சியைத் தலை மை தாங்கி வழிநடத்த வாய்ப்பைப் பெற்ற நம்மைப்போன்றவர்கள் சாதி பெயரையோ, எந்த சாதி எனக்கேள்வி எழுப்புவது உள்ள படியே வருத்தத்துக்கும் வேதனைக்கும் உரியது. அவர் அப்படி கேள்வி எழுப்பியதாகக் கேள்விப்படுவது அதிர்ச்சியளிக்கிறது. என்னுடைய அதிர்ச்சியை யும், வேதனையையும் வெளிப்படுத்துகிறேன்  என்று தெரிவித்தார்.

;