சிறிய வகை அணு உலைகள் அமைக்கும் என்எல்சி
சென்னை, மார்ச் 3- நிலக்கரி சுரங்கங்க ளில் 300 மெகாவாட்டுக்கு குறைவாக மின்சார உற் பத்தி செய்யும் வகையில் சிறிய வகை அணு உலை கள் அமைக்க திட்டமிட் டுள்ளதாக என்.எல்.சி நிர்வாக இயக்கு நர் தெரிவித்துள்ளார்.
இந்திய அணுசக்தி கழகத்துடன் இது குறித்து பேச்சுவார்த்தை நடப்பதாகவும் 2070 ஆம் ஆண்டுக்குள் ஜீரோ (0 ) கரிய மில வாயு வெளியேற்றம் என்ற இலக்கை எட்ட இந்த சிறிய அணு உலைகள் திட் டம் உதவும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பிரதமரின் திட்டத்திற்கு ஆள் சேர்க்க அஞ்சல்
ஊழியர்களை நிர்ப்பந்திப்பதா?
மதுரை, மார்ச் 3- பிரதமரின் திட்டத் திற்கு ஆள் சேர்க்க ஞாயிற்றுக்கிழமையும் அஞ்சல் ஊழியர்களுக்கு ஓய்வு இல்லை என்ற அஞ்சல் நிர்வாகத்தின் அநியாயச் சுற்றறிக்கையை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி தலைமை அஞ்சல் பொது மேலாளருக்கு மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்க டேசன் கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:
பிரதம மந்திரி சூர்யா கர் யோஜனா திட்டத்திற்கு (சூர்ய ஒளி மின்சார மானியத் திட்டம்) இலக்குகள் நிர்ணயித்து ஆள் சேர்க்குமாறு அஞ்சல் நிர்வாகம் சுற்ற றிக்கை (Ref: BD-10RP/1/2024 BDMD-DOP dated 01.03.2024)
ஏற்கெனவே கடும் வேலைப்பளு வுடன் உள்ள அஞ்சல் ஊழியர்கள் எந்தப் பயிற்சியும் இல்லாது, பணிக்குத் தேவைப்படும் கைபேசியும் வழங்காமல் ஞாயிற்றுக் கிழமையும் வேலை பார்க்கு மாறு கடும் நிர்ப்பந்தத்திற்கு ஆளாக் கப்படுகிறார்கள்.
அஞ்சல் நிர்வாகத்தின் இந்த அணுகு முறை சட்ட விரோதமானது, தார்மீக நெறி களுக்கும் முரணானது.
ஆகவே அஞ்சல் நிர்வாகம் இச்சுற்ற றிக்கையை திரும்பப் பெற வேண்டும். எந்த ஊழியரையும் ஞாயிற்றுக்கிழமை பணியாற்ற வற்புறுத்தக்கூடாது என தலைமை அஞ்சல் பொது மேலாளர் டி.பி. ஸ்ரீதேவி அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளேன்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.