tamilnadu

img

நிவர் புயல் பாதிப்பு: இன்று மத்திய குழு வருகை...

சென்னை:
நிவர் புயல் பாதிப்பு சேதங்களை பார்வையிட மத்திய குழு சனிக்கிழமை டிசம்பர் 5 ஆம் தேதி தமிழகம் வருகிறது.

புயலால் அண்மையில் கடலூர், புதுச்சேரி, சென்னை, வேலூர், உள் ளிட்ட மாவட்டங்களில் பயிர் கள் மற்றும் வீடுகள் சேதமடைந்தது.இதுகுறித்து ஆய்வு செய்ய மத்திய உள்துறை இணை செயலாளர் தலைமையில் 2 குழுக்கள் தில்லியிலிருந்து சென்னைக்கு சனிக்கிழமை மதியம் 1 மணிக்கு வருகிறது.பின்னர் மதியம் 3.30க்கு  முதலமைச்சரை சந்தித்து அக்குழு ஆலோசனை நடத்தவுள்ளது. இதன் பின்னர் 2 குழுக்களாக பிரிந்து பல்வேறு பகுதிகளில் ஆய்வு செய்கிறது.பின்னர், 8 ஆம் தேதி சென்னைக்கு திரும்பும் மத்திய குழு புதுதில்லி சென்று பிரதமரிடம் அறிக்கையை சமர்ப்பிக்கவுள்ளது.

;