tamilnadu

img

நிர்மல் பள்ளி நிர்வாகி தோழர் குமார் காலமானார்... சிஐடியு இரங்கல்...

சென்னை:
சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் கூறியுள்ளதாவது:

நிர்மல் பள்ளி தோழர் குமார் அவர்கள் கொரோனா கொடிய நோயின்காரணமாக மறைந்தார் என்ற செய்தியால் அதிர்ச்சியில் உறைந்து போய் விட்டேன். டிவிஎஸ் லூகாஸ் கம்பெனி தொழிலாளர்கள் அந்த நிர்வாகத்தின் காட்டுமிராண்டித்தனமான அடக்குமுறையை எதிர்த்து சங்கம் அமைக்க முடிவு செய்த தோழர்களில் முக்கியமானவரும் தொடர் அடக்குமுறைகளுக்கு மத்தியில் தொடர்ந்து அந்தசங்கத்தை தோளில் சுமந்த பலதோழர்களில் ஒருவருமான தோழர்குமார் அந்த சங்கத்தின் பொருளாளராக கடைசி வரை பணியாற்றினார். அந்த சங்கத்திற்கு தோழர் வி.பி.சிந்தனை தலைவராக்கி அவரதுவழிகாட்டல்களை தேர்ந்த போர்வீரர் களை போல் லூகாஸ்-டிவிஎஸ் தோழர்கள் நிறைவேற்றினார்கள். அவரதுமறைவிற்கு பிறகு என் தலைமையிலும் தோழர் ஏஜிகே தலைமையிலும் அந்த சங்கம் செயல்பட்டது.

லூகாஸ் டிவிஎஸ் தொழிலாளர் சங்கத்தின் 65 லட்சம் ரூபாய் ஆரம்பநிதியில் தான் நிர்மல் பள்ளி உருவாக்கப்பட்டது. அரசாங்க போக்குவரத்து ஊழியர் சங்கமும் மின் ஊழியர் மத்திய அமைப்பும் பிறகு இந்த பள்ளிக்கு போதாமல் இருந்த 25 லட்சம்ரூபாய் பணத்தை அளித்து உதவினார்கள். நிர்மல் பள்ளியின்  வளாகத்தில் தோழர் வி.பி. சிந்தன் நிர்மல் உயர்நிலைப்பள்ளி என்ற பெயர் பொறிக்கப் பட வேண்டும் என்ற அவரது ஆசையையும் லூகாஸ்-டிவிஎஸ் தோழர் களின் விருப்பத்தையும் காணாமலே மறைந்துவிட்டார். நிர்மல் பள்ளியின் உருவாக்கத்தில்சிஐடியு பல பல ஆயிரம் தொழிலாளர்களின் பங்களிப்புகள் உண்டு. இப்போதும் அதற்கு அள்ளி வழங்கும்அன்புத் தோழர்களின் ஆதரவு இல்லாமல் அதை நடத்த முடியாது. அந்தப் பள்ளியின் துவக்கப் புள்ளிகள் மூன்றுஎன்று கொண்டால் அதில் ஒன்று ஏ எஸ்,ஏஜிகே, தோழர் குமார். அவரைமருத்துவமனையில் சேர்ப்பதற்கு முதல்  நாள்வரை பள்ளியின் அன்றாடப் பணிகளில் ஈடுபட்டிருந்தார். 

சிகிச்சைக்காக மருத்துவமனையில் அடுத்தநாள் சேர்க்கப்பட்ட பிறகு நல்ல சிகிச்சைகளும் பலனளிக்காமல் அவரை இழந்திருக்கிறோம்.தனிப்பட்ட முறையில் பள்ளி நிர்வாகத்தில் என்னுடைய வலது கை உடைந்ததை போல் உணருகிறேன். ஏற்கனவே ஏஜிகேவை இழந்துவிட்டோம். தோழர் குமார் ஆற்றியபணிகள் விளம்பரம் அற்றது. வெளிச்சம் காணாதது. இப்படிப்பட்டவர்களின் உழைப்புதான் சிஐடியுவின் வெற்றியின் அடிப்படை. ஒருவகையில் மிகுந்ததுணிச்சல்மிக்கவர் அவர். பல நேரங்களில் சில தோல்விகளை எதிர் கொள்ளும்போது அதை எதிர்க்கிற பலத்தையும், வெற்றி கொள்ள முடியும் என்ற நம்பிக்கையையும் தோழர்குமாரை போன்ற பல நூற்றுக்கணக்கான எளிய தொழிலாளர்கள் தான் எனக்கு வழங்குகிற மின் ஊட்டிகள். பள்ளி நிர்வாகத்தில் மிகப்பெரிய வெற்றிடம் உருவாகிவிட்டதாக நான் உணர்கிறேன். ஈடுகட்டுவது பெரும் சிரமம் .ஆயினும் அதையும் நாம் கடக்கவேண்டும் . கடப்போம் ! குமார் தோழரேஅதற்கான முன் ஏர் தடங்களை விட்டுச்சென்றிருக்கிறார். 
தோழர் குமார் அவர்களுக்கு சிஐடியு மாநிலக்குழுவின் சார்பிலும் என் சார்பிலும் அஞ்சலி செலுத்துகிறேன். அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறேன்.இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

;