சென்னை, ஜூலை 25- தமிழ்நாட்டில் இதுவரை நிபா வைரஸ் பாதிப்பு இல்லை என்றும் முதலமைச்சரின் அறிவுறுத்தலின் படி நடவடிக்கை எடுக்கப்பட்டு டெங்கு பாதிப்புகள் கட்டுக்குள் இருக்கிறது என்றும் மருத்துவம்- மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச் சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
சென்னை சிஐடி நகர் பகுதியில் மழைக்கால நோய்கள் முன்னெச்ச ரிக்கை சிறப்பு மருத்துவ முகாமினை ஜூலை 25 வியாழனன்று மருத்து வம்-மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து அமைச்சர் செய்தியா ளர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் ஒவ்வொரு பருவ மழைக்கு முன்னரும், பருவமழையி னால் ஏற்படும் நோய் பாதிப்பு களை கண்டறிந்து, அவற்றுக்கு சிகி ச்சை அளிக்கும் பணி தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. வடகிழக்கு பருவமழை, தென்மேற்கு பருவ மழை என்று ஒவ்வொரு பருவமழை யின் போதும் ஏற்படும் பாதிப்புகள் தொடர்ச்சியாக கண்டறியப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரு கின்றன.
இந்த நடவடிக்கைகளின் காரண மாக, கடந்த 3 ஆண்டுகளாக மழைக் கால நோய் பாதிப்புகள் அனைத்தும் கட்டுக்குள் உள்ளன. கடந்த ஆண்டை பொறுத்தவரை அக்டோ பர் முதல் டிசம்பர் மாதம் வரை 10 ஆயிரம் மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என்று அறிவிக்கப் பட்டு, மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் என்ற வகையில் 26 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, மிகப் பெரிய அளவில் நோய் பாதிப்பு கள் கட்டுப்படுத்தப்பட்டது.
கடந்த காலங்களில் டெங்கு பாதிப்பினால் உயிரிழப்பு அதிக அள வில் ஏற்பட்டது. கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழ்நாடு முதல மைச்சர் வழிகாட்டுதலின்படி நட வடிக்கைகள் எடுக்கப்பட்டு டெங்கு உயிரிழப்புகள் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
உள்ளாட்சி நிர்வாகங்கள் குறிப்பாக ஊரக உள்ளாட்சி, நகர்ப் புற உள்ளாட்சி போன்ற அமைப்பு களோடு ஒருங்கிணைந்து, மக்கள் நல்வாழ்வுத்துறை தொடர்ந்து பணியாற்றிக்கொண்டிருக்கின்ற காரணத்தினால், டெங்கு பாதிப் புகளினால் ஏற்படும் உயிரிழப்புகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
மழைக்காலங்களில் ஏற்படும் காய்ச்சல் கண்டறியும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகி றது. இந்த ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி தொடங்கி நேற்று வரை டெங்குவால் 6565 பேர் பாதிக்கப்பட் டுள்ளனர்.3 பேர் உயிரிழந்துள்ளனர். எலிக்காய்ச்சல், ப்ளூ காய்ச்சல், வெறிநாய்க்கடிகள் போன்றவற்றில் இதுவரை உயிரிழப்புகள் ஏற்பட் டுள்ளன.
வடகிழக்கு பருவமழையை எதிர்நோக்கி இருக்கக்கூடிய நிலையில் நோய் பாதிப்புகளை கட்டுக்குள் வைத்திருப்பதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் வழிகாட்டுதலோடு சென்னை மாநகராட்சி மற்றும் சுகாதாரத்துறை சார் பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 476 நடமாடும் மருத்துவக் குழுக்கள் செயல்பட்டு வருகிறது. 805 நடமாடும் பள்ளி மருத்துவக் குழுக்கள் செயல்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
மருத்துவர் அறிவுரையின்றிமருந்துகளை உட்கொள்ளாதீர்!
22,384 தற்காலிக பணியாளர்கள் கொசு ஒழிப்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். உள்ளாட்சிகளை ஒருங்கிணைத்து கொசு புழுக்களை அழிக்கும் பணிகள், காய்ச்சல் பாதிப்புகளை கண்டறிந்து சிகிச்சை அளிக்கும் பணிகளுக்காக மூன்று துறைகளும் ஒருங்கிணைந்த கூட்டம் ஒரு வார காலத்தில் நடை பெற உள்ளது.
காய்ச்சல் பாதிப்பு யாருக்கா வது இருந்தால் மருத்துவர் அறி வுரை இல்லாமல் மருந்துகளை உட்கொள்ள வேண்டாம். நிபா வைரஸ் பாதிப்பால் கேரளாவில் 3 பேர் உயிரிழந்துள்ள நிலையில் தமிழக கேரளா எல்லையில் தொடர்ந்து கண்காணிப்பட்டு நடவ டிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இதுவரை நிபா வைரஸ் பாதிப்பு தமிழ்நாட்டில் இல்லை.
இவ்வாறு அமைச்சர் தெரிவித் தார்.