சென்னை செப்.16- நாடாளுமன்ற தேர்தல் நெருங்கியுள்ளதால் எதிர்க் கட்சிகள் ஆளும் மாநிலங்க ளில் குழப்பத்தை ஏற்படுத் தும் முயற்சியில் சிபிஐ, வரு மானவரி, அமலாக்கத் துறை, என்ஐஏ தீவிர சோத னையில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில், தேசிய புலனாய்வு முகமை அதிகாரி கள் தமிழ்நாடு, தெலுங்கானா இரு மாநிலங்களின் 31 இடங் களில் சனிக்கிழமையன்று சோதனை நடத்தினர். தமிழ்நாட்டில் கோவை கார் வெடிப்பு வழக்கு தொடர்பாக 26 இடங்க ளில் சோதனை மேற்கொள் ளப்பட்டது. அதிகபட்சமாக கோவையில் 22 இடங் கள், சென்னையில் 3 இடங்கள் மற்றும் தென்காசி மாவட்டத்தின் கடைய நல்லூரில் ஓரிடம் என மொத் தம் 26 இடங்களிலும், தெலுங்கானாவின் ஹைதரா பாத் நகரில் 5 இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டு உள்ளது. ஹவாலா பணம், ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக என்ஐஏ தரப்பில் தெரிவிக் கப்பட்டுள்ளது.